80தொன்னூல்விளக்கம்
களைகட்டபயிர், களைகட்டகூலி, எனஇன்னதற்கிதுபயனும்; உண்டவிளைப்பு,
குடிப்போனவூர், எனப்பிறபெயரெஞ்சுதலுமறிக. பெயரெச்சவாய்பாடுகள்:- செய்த,
செய்கின்ற, செய்யும், எனமூன்றாம். இவை இறப்பு, நிகழ்வு, எதிர்வு, முக்காலத்தின்வரும்.
(உ-ம்.) பட்டபகை, படுகின்றபகை, படும்பகை, எனவரும். உண்டுபோனான்,
உண்ணப்போனான், உண்டக்கால்வருவான், இவைமுக்காலத்து வினையெச்சம்.
வினையெச்ச விகற்ப மினிக் காட்டுதும். - நன்னூல். - "செய்த செய்கின்ற
செய்யுமென்பாட்டிற், காலமுஞ்செயலுந் தோன்றிப் பாலொடு,
செய்வதாதியறுபொருட்பெயரு, மெஞ்ச நிற்பது பெயரெச் சம்மே." - அகத்தியம். -
"காலமும் வினையுந்தோன்றிப் பாறோன்றாது, வினைகொள்ளு மதுவினையெச்சமே. -
காலமும் வினையுந்தோன்றிப் பாறோன்றாது, பெயர் கொள்ளுமது பெயரெச்சம்மே."
இவைமேற்கோள். வடநூலார் பெயரெச்சம் - சந்திராந்தம், எ-ம். வினையெச்சம் -
துவாந்தம், எ-ம். கூறுவர். எ-று. (1)
 

118.

உம்மீற்ற வெச்சத் தீறு மீற்றய
லுயிரு முயிர்மெய்யு மொழிதலாஞ் செய்யுட்
கும்முந் தாதலு மொக்கு மென்ப.
 
     (இ-ள்.) பெயரெச்சத்திற்குச் சிறப்புவிதியா மாறுணர்த்துதும். உம் மெனமுடியும்
எதிர்காலப் பெயரெச்சந் தொக்குநின்று ஈற்றுமகரமு மீற்றயலுகரமு முகரத்தோ
டதன்மெய்யும் வேண்டுழிக் கெடுதலாம். இங்ஙனந்தொக்குநிற்புழி முக்காலத்துக்கு
மேற்பன. (உ-ம்.) செய்யுந்தொழில் எ-து. செய்யுதொழில் - செய்தொழில், எ-ம்.
வாழுங்குடி, எ-து. வாழுகுடி - வா ழ்குடி, எனவரும். இவற்றைவிரிக்குங்காலை,
வாழ்ந்தகுடி - வாழாநின்றகுடி - வாழுங்குடி, எனமுக்காலத்துப் பொருளனவாம். இவ்வா
றொருகாலமுந் தோன்றாது தொக்குநிற்பவே இப்பெயரெச்சங்கள் வருங்கால
வினைத்தொகை யெனப்படும். (உ-ம்.) ஆகும், எ-து. ஆம், எ-ம். போகும், எ-து. போம்.
எ-ம். ஈற்றுமகர நின்றதனால் இவை எஞ்சினும் வினைத்தொகை யெனப்படா.
இஃதன்றியே செய்யுளிடத்தில் ஈற்றின்கண்ணே, து, கூட்டி உம், உந்து, ஆகவும்
பெறுமெனக் கொள்க. (உ-ம்.) செய்யும், செய்யுந்து, வாழும், வாழுந்து, எ-ம்.
'புணரிநீர்சூழுந்து பூவுலகில்யாவு, முணரினினக்கில்லை யொப்பு.' எ-ம். பிறவுமன்ன.
எ-று. (2)
 

119.

வினையெச் சங்கொள் விகுதி இ உ
உவ்வோ டெனவும் ஊபுஆ விறப்பே
அஇரு கருத்தா வணையி னிகழ்வே
யொருகருத் தாவு மோரிடத் திரண்டு
மியைஅ வன்றி இல்இன் இயஇயர்
வான்பான் பாக்கு வரும்பொழு தாம்பிற.