ஒன்றெனின் முதல்வினை கொண்டு முடிந்த வினையெச்ச மெனவும் வழங்கும். - நன்னூல். - "அவற்றுள், முதலினான்கு மீற்றின்மூன்றும், வினைமுதல்கொள்ளும் பிறவுமேற்கும்பிற." எ-து. மேற்கோள். எ-று.(4) | 121. | எதிர்மறை யெச்சத் தியலும் விகுதி யாமலா தாமை யாவென நான்கே. | | (இ-ள்.) ஒருவினைத் தொழிலை நீக்குதற் கெதிர்மறையாகவரும் வினையெச்ச விகுதிகளா மாறுணர்த்துதும். ஆமல், ஆது, ஆமை, ஆ, விகுதி யெதிர்மறை வினையெச்சங்களாம். (உ-ம்.) செய்யாமல், உண்ணாமல், எ-ம். செய்யாது, உண்ணாது, எ-ம். செய்யாமை, உண்ணாமை, எ-ம். செய்யா, உண்ணா, எ-ம். வரும். கூறாமல், என அல் விகுதி வருதலுங்கொள்க. 'வரந்தரு முனிவனெய்த வருதலும் வெருவிமாயா, நிரந்தர முலகினிற்கு நெடும்பழி பூண்டா நின்றான்.' ஈண்டு, மாயாமல் என்பதற்கு மாயா வென்றது காண்க. எ-று. (5) | 122. | வரல்தரல் மூவிட மருவுதற் குரிய செலல் கொடை சேரும் படர்க்கை யொன்றே. | | (இ-ள்.) இடம்வழுவாமற் காத்தலாமாறுணர்த்துதும். ஈண்டுவினையி யல்புரைப்புழி நால்வினை யுரிமையை விளக்குதன் முறையே யாகையில் வருதல், தருதல், என விருவினைச்சொல் தன்மை முன்னிலை படர்க்கையை யணைந்து வரும். (உ-ம்.) எனக்காடைவந்தது, நினக்கணிவந்தது, அவனுக்குப் பொன் வந்தது, எ-ம். எனக்குத் தந்தான், நினக்குத் தந்தான், அவனுக்குத் தந்தான்,எ-ம். வரும். செல்லுதல், கொடுத்தல், என விருவினைச் சொல் படர்க்கைப் பெயரை யணைந்து வரும். (உ-ம்.) அவனிடத்துச் சென்றான், அவனுக் காடைகொடுத்தான், எ-ம். வரும். எனக்கு நினக்கு மாடை கொடுத்தா னெனவரின் வழுவாம். - நன்னூல். - "தரல்வரல் கொடை செலல்சாரும் படர்க்கை, யெழுவாயிரண்டு மெஞ்சியவேற்கும்." எ-து. மேற்கோள். எ-று. (6) மூன்றாவ:- ஈரெச்சம். - முற்றிற்று. | நான்காவது:- வினைக்குறிப்பு. Chapter IV. - Defective Verbs. | 123. | வினைக்குறிப் பென்ப வினைபோல் விகுதி பெற்றிடம் பாற்கும் பெயர்ப்பகு பதமே. | | (இ-ள்.) வினைக்குறிப்பா மாறுணர்த்துதும். மேலே பெயர்ப்பகுபதங்களை விளக்கிய விடத்தில் அவையெலா மற்றைப் பெயர்களைப்போலே |
|
|