85வினைச்சொல்லியல்
தவ்வரின் அவற்றொடு தவ்வுமுறையே ற ட வாமென்றாகையின் லவ்வொற் றீற்ற
பகுதிக்கண் லகரம் றகர வொற்றாகித் துவ்வும், றுவ்வாம். (உ-ம்.) கடல்-கடற்று,
முதல்-முதற்று, மேல்-மேற்று, பால்-பாற்று, எ-ம். யார்க்கும்பொருள் பொழிவார்
மேற்றேபுகழ், எ-ம். வரும். அன்றியும் இன்னென்னு மிடைநிலைபெற்ற சொற்கண்,
ளகரம், டகரவொற்றாகத் திரிந்து துவ்வும், றுவ்வுமாம். (உ-ம்.) வில்லினன் - வில்லிற்று,
வெற்பினன் - வெற்பிற்று, பொற்பினன் - பொற்பிற்று, இருளினன் - இருளிற்று, எ-ம்.
வரும். அன்றியும் ளவ்வீற்ற பகுதிக்கண் ளகரம் டகரவொற்றாகத்திரிந்து, டு, வரும்.
(உ-ம்.) நாள்-நாட்டு, பொருள்-பொருட்டு, இருள்-இருட்டு, இப்பயிர்மாரிநாட்டு, எ-ம்.
வரும். அன்றியும், ணகரந் திரிந்து கண்ணெனு மேழாம் வேற்றுமை யுருபு
கட்டெனவுமாம். - குறள். - 'குடிப்பிறந்து குற்றத்தினீங் கிவடுப்பரியு, நாணுடையான்
கட்டேதெளிவு.' - வெண்பா. - "வெற்பிற்றே செம்பொன் விரிகடற்றே வெண்முத்தம்,
பொற்பிற்றாம் பூமுகைத்தே தேனினிமை - கற்பித்தே, பெண்ணழகு நல்லறத்தே
பேராப்பொருளின்பங், கண்ணழகு செய்தயைத்தே காண்." என இவை யெல்லாம்
அஃறிணை யொருமைப் படர்க்கைக்கண் வினைக்குறிப்பு முற்றாயின. இவற்றுட்பலவே
பெயராகவும் வழங்கும். (உ-ம்.) இருட்டு, பொருட்டு, நன்று, தீயது, எ-ம். வரும்.
அன்றியும், பன்மைப்படர்க்கையோவெனின், அகர மீறாக முடியும். (உ-ம்.) கொடிய,
பெரிய, உடைய, நடைய, முகத்த, முகத்தன, புறத்த, புறத்தன, பெயர, பெயரின, முதல,
பால, மேல, வில்லின, வெற்பின, நாள, பொருள, பொருளன, எ-ம். வரும். பிறவுமன்ன
எ-று. (2)
 

125.

வினைக்குறிப் பெஞ்சி யீற்றகரம் பொதுவே.
 
     (இ-ள்.) வினைக்குறிப்பெச்சமா மாறுணர்த்துதும். மேற்கூறியபடி
பலவின்பால் வினைக்குறிப்புச் சொல்லெல்லாம் அகர விகுதியான் முடியும். பாலே
தோன்றா தெவ்வகைப் பெயர்க்கு மேற்றவினைக் குறிப்பெச்சமாகையில் அகரவிகுதியான்
முடியவும் பெறும். அங்ஙன மேற்சொன்ன தன்மையாற் பலவின்பால் முற்றுவினையாக
நடந்தன, முடிந்தன, பூத்தன, என வருதலன்றியே அவைநடந்த, இவைமுடிந்த,
பலமலர்பூத்த, முதலிய முற்றுவினை யெனவழங்கு மீண்டிம்மொழிகடாமே பெயரெச்சமாக
வழங்கவும் பெறும். (உ-ம்.) நடந்த செய்தியைச் சொல்லாய், முடிந்த தொழிலைக்
காண்மின், பூத்தமலரை யணிமின், எ-ம். இத்தன்மைத் தாகும்வினைக் குறிப்பெனக்
கண்டுணர்க. ஆகையி லவையே திறத்த, இவை யரும்பொருள, இம்மலர்சுனைய,
இம்மாடெல்லாமலைய, நின்குணமரிய, நின்சொல் கொடிய, இத்தொடக்கத்தனபிறவும்
பலவின்பால் வினைக்குறிப்பு முற்றெனப்படும். ஈண்டுப் பெயரெச்சம்போலவு
மடைமொழிபோலவு மற்றொரு பெயரைச் சார்ந்து வருங்கால்
மூவிடத்தைம்பாற்குப்பொதுவாய் நிற்கும் வினைக் குறிப்பெச்ச மெனப்படும். (உ-ம்.)
திறத்தகையானை மாய்ந்தது, அரும்பொருள வோதிகளைச் சொன்னான்,