சுனையமலரைக் கொய்தேன், மலையநெல்லிது, அரியகுணத்தவன், கொடியசொல்லன், என்பாலதொழிலைச்செய்தான், மையகண், கையவளை, நனையகொம்பு, சினையமலர், முனையவேன் முதலிய பலவும் வினைக்குறிப்பெச்சமெனப்படும். அன்றியு மிம்மொழிகடாமே மற்றொரு பெயரைச்சார்ந்து தம்பெயராக வினையொடுபுணர்ந்து பலவின்பாற் பகுபதப் பெயருமாமெனக் கொள்க. (உ-ம்.) அரியசொன்னாய், இனியகூ றாய், கொடியசெய்தாய், நிறத்தவாயமலரே, மென்னடைய வாயவன்னம், இவை பலவின்பாற் பகுதப் பெயராம். பிறவுமன்ன. எ-று. (3) | 126. | அன்மை வினைக்குறிப் பணையுந் திரிபொரு ளன்றுமே லதுவறி னான்றாந் தூக்கி னின்றி யன்றி யென்றெஞ்சும் இயாப்பி னுவ்வு மாமாயி னுறுவலி யியல்பே. | | (இ-ள்.) சிலவினைக்குறிப்பு விகற்பமாமாறுணர்த்துதும். ஒன்றனியல்பு மறுக்கும் அன்மையும், ஒன்றனிருப்பு மறுக்கும் இன்மையும், எனவிரு சொல்லால் அல்லன், இல்லன், என விருபகுபதமாம். இவையே வினைக்கு றிப்பாகி அல்லன் - இல்லன் - யான், எ-ம். அல்லேம் - இல்லேம் - யாம், எ-ம். அல்லை - இல்லை - நீ, எ-ம். அல்லீர் - இல்லீர் - நீர், அல்லன் - இல்லன் - அவன், எ-ம். அல்லள் - இல்லள் - அவள், எ-ம். அல்லர் - இல்லர் - அவர், எ-ம். அன்று - இன்று - அது, எ-ம். அல்ல - இல்ல - அவை, எ-ம். வருமாயினும், இஃதோ, அஃதோ, என்றையந் தோன்றிய பின்னர்த்தேறி ஒன்றை மறுத்து மற்றொன்றைத் தெரிந்து கொள்ளு மிடத்தில் அன்மையில் வரும் வினைக் குறிப்புச்சொல் தெரிந்த பொருளின்பாலும் இடமும் பற்றிவரு மெனக் கொள்க. (உ-ம்.) மானல்லன்மகன், மகனன்றுமான், இவளல்லரிவர், ஒன்றல்லபல, பலவன்றொன்று, யானல்லைநீ, நீயல்லேம்யாம், எனவரும். அன்றியும், அது, என்னுஞ்சொன் முன்னே அன்று, என்னுஞ்சொல்வரின் செய்யுளில் ஆன்றாம். (உ-ம்.) அது + அன்று = அதான்று, எனவரும். இன்றி, அன்றி, என்னும் வினையெஞ்சுகிளவி செய்யுளில் உகரம் பெற்றுவரும், வரினும் வல்லினமிரட்டா. (உ-ம்.) வாளின்றிப்பிடியார், எ-து. வாளின்று பிடியார், எ-ம். நாளன்றிப்போகி, எ-து. நாளன்றுபோகி, எ-ம். உப்பின்று புற்கையுண்கமா, எ-ம். வரும். - நன்னூல் - 'அதுமுன்வரு மன்றான்றாந் தூக்கின் அன்றியின்றி யென்வினையெஞ்சிகரந், தொடர்பினுளுகரமாய்வ ரினியல்பே." இவை மேற்கோள். எ-று. (4) | 127. | வழுவா முரிமை மயங்கிக் கெடினவை யிடம்பா றிணைபொழு திறைவினா மரபேழே. | | (இ-ள்.) பெயர்க்கும் வினைக்கும் வரும் வழுவா மாறுணர்த்துதும். பெயர்க்கும் வினைக்கு மேலேகாட்டிய தத்தமியல்பு கெடும்படி மயங்கிவருமொழி |
|
|