86தொன்னூல்விளக்கம்
சுனையமலரைக் கொய்தேன், மலையநெல்லிது, அரியகுணத்தவன், கொடியசொல்லன்,
என்பாலதொழிலைச்செய்தான், மையகண், கையவளை, நனையகொம்பு, சினையமலர்,
முனையவேன் முதலிய பலவும் வினைக்குறிப்பெச்சமெனப்படும். அன்றியு
மிம்மொழிகடாமே மற்றொரு பெயரைச்சார்ந்து தம்பெயராக வினையொடுபுணர்ந்து
பலவின்பாற் பகுபதப் பெயருமாமெனக் கொள்க. (உ-ம்.) அரியசொன்னாய், இனியகூ
றாய், கொடியசெய்தாய், நிறத்தவாயமலரே, மென்னடைய வாயவன்னம், இவை
பலவின்பாற் பகுதப் பெயராம். பிறவுமன்ன. எ-று. (3)
 

126.

அன்மை வினைக்குறிப் பணையுந் திரிபொரு
ளன்றுமே லதுவறி னான்றாந் தூக்கி
னின்றி யன்றி யென்றெஞ்சும் இயாப்பி
னுவ்வு மாமாயி னுறுவலி யியல்பே.
 
     (இ-ள்.) சிலவினைக்குறிப்பு விகற்பமாமாறுணர்த்துதும். ஒன்றனியல்பு மறுக்கும்
அன்மையும், ஒன்றனிருப்பு மறுக்கும் இன்மையும், எனவிரு சொல்லால் அல்லன்,
இல்லன், என விருபகுபதமாம். இவையே வினைக்கு றிப்பாகி அல்லன் - இல்லன் -
யான், எ-ம். அல்லேம் - இல்லேம் - யாம், எ-ம். அல்லை - இல்லை - நீ, எ-ம்.
அல்லீர் - இல்லீர் - நீர், அல்லன் - இல்லன் - அவன், எ-ம். அல்லள் - இல்லள் -
அவள், எ-ம். அல்லர் - இல்லர் - அவர், எ-ம். அன்று - இன்று - அது, எ-ம். அல்ல
- இல்ல - அவை, எ-ம். வருமாயினும், இஃதோ, அஃதோ, என்றையந் தோன்றிய
பின்னர்த்தேறி ஒன்றை மறுத்து மற்றொன்றைத் தெரிந்து கொள்ளு மிடத்தில்
அன்மையில் வரும் வினைக் குறிப்புச்சொல் தெரிந்த பொருளின்பாலும் இடமும்
பற்றிவரு மெனக் கொள்க. (உ-ம்.) மானல்லன்மகன், மகனன்றுமான், இவளல்லரிவர்,
ஒன்றல்லபல, பலவன்றொன்று, யானல்லைநீ, நீயல்லேம்யாம், எனவரும். அன்றியும்,
அது, என்னுஞ்சொன் முன்னே அன்று, என்னுஞ்சொல்வரின் செய்யுளில் ஆன்றாம்.
(உ-ம்.) அது + அன்று = அதான்று, எனவரும். இன்றி, அன்றி, என்னும்
வினையெஞ்சுகிளவி செய்யுளில் உகரம் பெற்றுவரும், வரினும் வல்லினமிரட்டா. (உ-ம்.)
வாளின்றிப்பிடியார், எ-து. வாளின்று பிடியார், எ-ம். நாளன்றிப்போகி, எ-து.
நாளன்றுபோகி, எ-ம். உப்பின்று புற்கையுண்கமா, எ-ம். வரும். - நன்னூல் -
'அதுமுன்வரு மன்றான்றாந் தூக்கின் அன்றியின்றி யென்வினையெஞ்சிகரந்,
தொடர்பினுளுகரமாய்வ ரினியல்பே." இவை மேற்கோள். எ-று. (4)
 

127.

வழுவா முரிமை மயங்கிக் கெடினவை
யிடம்பா றிணைபொழு திறைவினா மரபேழே.
 
     (இ-ள்.) பெயர்க்கும் வினைக்கும் வரும் வழுவா மாறுணர்த்துதும். பெயர்க்கும்
வினைக்கு மேலேகாட்டிய தத்தமியல்பு கெடும்படி மயங்கிவருமொழி