88தொன்னூல்விளக்கம்
முகமாகியமதி, உயர்திணைச்சினை அஃறிணை முதலோடு மயங்கிற்று. கல்வி மங்கையை
நல்லோர் விரும்புவார், அஃறிணை உயர்திணையோடு மயங்கிற்று. இவை உருவகவணி.
மயில்போலு மங்கை, அஃறிணை உயர்திணையோடுமயங்கிற்று. கயல்போலுங்கண்,
உயர்திணைச்சினை அஃறிணை முதலோடுமயங்கிற்று. தளிர்போலுமேனி, உயர்திணை
முதல் அஃறிணைச் சினையோடு மயங்கிற்று. இவை உவமையணி. - தேம்பாவணி. -
"குரவநீள் வேலிகோலுங் குடங்கையுட் டுஞ்சித்தன்னைக், கரவநீள் பசும்பூநெற்றிக்கரு
ம்புகணிறுவியூக்கி, விரவிநீடலையின் வாழை விடுங்கனி நக்கித்தீங்கான்,
பரவநீள்பலபூங்காவும் படுநெறிப்போயினாரே." இதனுள் பலசினைப்பெயரும் பலதொழிற்
பெயரும் பலகுணப்பெயருமுரிய தற்பொருட்கன்றிப்பிறழ்ந்து பிறபொருட்குஞ்
சிறப்போடுரைத்தவாறு காண்க. பிறவென்றமிகையால் இவன் சரசுவதிக் கொப்பானவன்,
எனப் பான்மயங்கிக்கூறுதலும்; அரசு, வேந்து, என உயர்திணை அஃறிணையாகக்
கூறுதலும், அலவன், நகுலன், கலுழன், சுணங்கன், என அஃறிணையை
உயர்திணையாகக்கூறுதலுங் கொள்க. - நன்னூல். - "உருவக வுவமையிற்றிணை
சினைமுதல்கள், பிறழ்தலும் பிறவும் பேணினர்கொளலே." எ-து. மேற்கோள். எ-று. (7)

நான்காவது:-வினைக்குறிப்பு.-முற்றிற்று.

மூன்றாமோத்துவினைச்சொல்லியல். - முற்றிற்று.
 

நான்காமோத்துஇடைச்சொல்லியல்.
Part IV. - Particles.
 

130.

இடைச்சொற் றனிநிலை யின்றி முன்பின்
வினைபெயர் சேர்ந்து வேற்றுமை சாரியை
வினையொப் புருபுகளும் விளங்குதம் பொருளவு
மிசைநிறைப் பனவு மசைநிறைப் பனவுங்
குறிப்பு மெனவெண் கூற்றவை யென்ப.
 
     (இ-ள்.) மேலே வகுத்துக்கூறிய நால்வகைச் சொற்களு ளிவ்வோத்தின்கண்ணே
யிடைச்சொல்லியல்பினை விளக்குதும். இடையெனப்படுவன வேற்றுமை யுருபுகளும்,
வினையுருபுகளும் சாரியையுருபுகளும், உவமையுருபுகளும், தத்தம்பொருளைக்
காட்டுவனவும், இசைநிறைப்பனவும், அசைநிறைப்பனவும், குறிப்பின்வருவனவும்,
என்றிவ்வெண்வகையவாகித் தாமாகத் தனியேவாராமற் பெயர்க்கும்
வினைக்கும்பின்னுமுன்னுமாக ஓரிடத் தொன்றாயினும் பலவாயினும் வந்து
நிற்பதுஇடைச்சொல் லெனப்படும். (உ-ம்.) ஐ, ஆல், என வேற்றுமை யுருபும், அன்,
ஆன், அள், ஆள்,