என வினைவிகுதியும், அன், ஆன், இன், அல், எனச்சாரியையும், போல, புரைய, ன உவமையுருபும், ஏ, ஓ, முதலிய தத்தம் பொருளனவும், எ, ஒ, என இசைநிறைப்பனவும், மியா, இகம், என அசை நிறைப்பனவும், விண்ணென, ஒல்லென, கல்லென, எனக்குறிப்புமுறையே வெண்வகை யிடைச் சொல் வந்தவாறுகாண்க. - நன்னூல். - ``வேற்றுமை வினைசாரியை யொப்புருபுக, டத்தம்பொருள விசைநிறையசைநிலை, குறிப்பெனெண் பகுதியிற் றனித்தியலின்றிப், பெயரினும் வினையினும் பின்முன்னோரிடத், தொன்றும்பலவும் வந்தொன்றுவ திடைச்சொல்.ழுழு எ-று. (1) | 131. | ஏயென் னிடைச்சொல் லீற்றசை தேற்றமெண் வினாப்பிரி நிலையிசை நிறையென வாறே. | | (இ-ள்.) ஏகாரவிடைச்சொல்லா மாறுணர்த்துதும். ஏகாரமென்னும் இடைச்சொல் பொருளில்லாமை ஈற்றசையாகவும், தேறின துணிவுகாட்டவும், பலவற்றையடுக்கி யெண்ணவும், ஒன்றை வினாவவும், பலவற்றுளொன்றைப் பிரிக்கவும், ஓசைநிறைக்கவும், என இவ்வாறிடத்து மேற்கு மென்றார் புலவர். (உ-ம்.) மல்லலோங் கெழிலியானை மருமம்பாய்ந்தொளித்ததே, எ-து. ஏகாரம் பொருளில்லாமை சார்த்திக்கூறினதால் ஈற்றசை பொருள். பொழிவார் மேற்றேபுகழ், எ-து. ஏகாரம் தெளிவின்கண்வருதலால் தேற்றம். இதை வடநூலார் அயோகவிவச்சேத மென்பர். நிலனே நீரே தீயே வளியே வெளியே, எ-து. ஏகாரம், நிலனும், நீரும். தீயும், வளியும், வெளியும், எனப்பொருள்பட வெண்ணி நிற்றலின் எண். நீயே தந்தாய், எ-து. ஏகாரம் நீயேதந்தாய் எனவினாவிநிற்றலின் வினா. அவனே தந்தான், எ-து. ஏகாரம். ஒரு கூட்டத்தினின்று மொருவனைப்பிரித்து நிற்றலின் பிரிநிலை. இதனைவடநூலார் இதரயோக விவச்சேதமென்பர். எயேயிவளொருத்தி பேடியென் றழுதாள், எ-து. ஏகாரம் செய்யுளி லிசைநிறைத்து நிற்றலின் இசைநிறை. இவையன்றி எதிர்மறையிலும் வரும். (உ-ம்.) யானேகொண்டேன், எ-து. ஏகாரம் யான்கொள்கிலேனெ னப் பொருடந்து நிற்றலின் எதிர்மறை. - நன்னூல். - ``பிரிநிலை வினாவெண் ணீற்றசை தேற்ற, மிசைநிறை யெனவா றேகா ரம்மே. - தொல்காப்பியம். - `தேற்றம் வினாவே பிரிநிலை யெண்ணே, யீற்றிசை யிவ்வைந் தேகா ரம்மே.ழு இவை மேற்கோள். எ-று. (2) | 132. | ஓபிரிப் பசைநிலை யொழிவெதிர் மறைவினாத் தெளிவு கழிவு சிறப்பென வெட்டே. | | (இ-ள்.) ஓகாரவிடைச்சொல்லா மாறுணர்த்துதும். ஓகாரமென்னும் இடைச்சொல் பிரிநிலையும், அசைநிலையும், ஒருசொல்லொழியவருமொழி யிசையும், ஒன்றைமறுத்தலும், வினாவும், தெளிவும், ஒருபொருட்கழிதலும், ஒன்றைச் சிறப்பித்தலும், என்றிவ்வெட்டுப் பொருள்களைக் காட்டுவதற்கேற்குமென்றறிக. (உ-ம்.) அவனோ செய்தான், எ-து. ஓகாரம் பலருணின்று மொருவினைப் பிரித்து நிற்றலின் பிரிநிலை. |
|
|