89
என வினைவிகுதியும், அன், ஆன், இன், அல், எனச்சாரியையும், போல, புரைய, ன
உவமையுருபும், ஏ, ஓ, முதலிய தத்தம் பொருளனவும், எ, ஒ, என இசைநிறைப்பனவும்,
மியா, இகம், என அசை நிறைப்பனவும், விண்ணென, ஒல்லென, கல்லென,
எனக்குறிப்புமுறையே வெண்வகை யிடைச் சொல் வந்தவாறுகாண்க. - நன்னூல். -
``வேற்றுமை வினைசாரியை யொப்புருபுக, டத்தம்பொருள விசைநிறையசைநிலை,
குறிப்பெனெண் பகுதியிற் றனித்தியலின்றிப், பெயரினும் வினையினும்
பின்முன்னோரிடத், தொன்றும்பலவும் வந்தொன்றுவ திடைச்சொல்.ழுழு எ-று. (1)
 

131.

ஏயென் னிடைச்சொல் லீற்றசை தேற்றமெண்
வினாப்பிரி நிலையிசை நிறையென வாறே.
 
     (இ-ள்.) ஏகாரவிடைச்சொல்லா மாறுணர்த்துதும். ஏகாரமென்னும் இடைச்சொல்
பொருளில்லாமை ஈற்றசையாகவும், தேறின துணிவுகாட்டவும், பலவற்றையடுக்கி
யெண்ணவும், ஒன்றை வினாவவும், பலவற்றுளொன்றைப் பிரிக்கவும், ஓசைநிறைக்கவும்,
என இவ்வாறிடத்து மேற்கு மென்றார் புலவர். (உ-ம்.) மல்லலோங் கெழிலியானை
மருமம்பாய்ந்தொளித்ததே, எ-து. ஏகாரம் பொருளில்லாமை சார்த்திக்கூறினதால்
ஈற்றசை பொருள். பொழிவார் மேற்றேபுகழ், எ-து. ஏகாரம் தெளிவின்கண்வருதலால்
தேற்றம். இதை வடநூலார் அயோகவிவச்சேத மென்பர். நிலனே நீரே தீயே வளியே
வெளியே, எ-து. ஏகாரம், நிலனும், நீரும். தீயும், வளியும், வெளியும், எனப்பொருள்பட
வெண்ணி நிற்றலின் எண். நீயே தந்தாய், எ-து. ஏகாரம் நீயேதந்தாய்
எனவினாவிநிற்றலின் வினா. அவனே தந்தான், எ-து. ஏகாரம். ஒரு கூட்டத்தினின்று
மொருவனைப்பிரித்து நிற்றலின் பிரிநிலை. இதனைவடநூலார் இதரயோக
விவச்சேதமென்பர். எயேயிவளொருத்தி பேடியென் றழுதாள், எ-து. ஏகாரம் செய்யுளி
லிசைநிறைத்து நிற்றலின் இசைநிறை. இவையன்றி எதிர்மறையிலும் வரும். (உ-ம்.)
யானேகொண்டேன், எ-து. ஏகாரம் யான்கொள்கிலேனெ னப் பொருடந்து நிற்றலின்
எதிர்மறை. - நன்னூல். - ``பிரிநிலை வினாவெண் ணீற்றசை தேற்ற, மிசைநிறை
யெனவா றேகா ரம்மே. - தொல்காப்பியம். - `தேற்றம் வினாவே பிரிநிலை யெண்ணே,
யீற்றிசை யிவ்வைந் தேகா ரம்மே.ழு இவை மேற்கோள். எ-று. (2)
 

132.

ஓபிரிப் பசைநிலை யொழிவெதிர் மறைவினாத்
தெளிவு கழிவு சிறப்பென வெட்டே.
 
     (இ-ள்.) ஓகாரவிடைச்சொல்லா மாறுணர்த்துதும். ஓகாரமென்னும் இடைச்சொல்
பிரிநிலையும், அசைநிலையும், ஒருசொல்லொழியவருமொழி யிசையும், ஒன்றைமறுத்தலும்,
வினாவும், தெளிவும், ஒருபொருட்கழிதலும், ஒன்றைச் சிறப்பித்தலும், என்றிவ்வெட்டுப்
பொருள்களைக் காட்டுவதற்கேற்குமென்றறிக. (உ-ம்.) அவனோ செய்தான்,
எ-து. ஓகாரம் பலருணின்று மொருவினைப் பிரித்து நிற்றலின் பிரிநிலை.