90தொன்னூல்விளக்கம்
பழியோவருந்துதும்யாமே, எ-து. ஒகாரம் பொருள்குறியாது நிற்றலின் அசைநிலை.
கொளலோ கொண்டான், எ-து. ஓகாரம் கொண்டுய்யப் போயினானல்லன் என ஒரு
சொல்லொழிவு படவந்தமையால் ஒழியிசை. யானோசொன்னேன், எ-து. ஓகாரம்
யான்சொல்லவில்லை எனப்பொருடந்து நிற்றலின் எதிர்மறை. அவனோ வல்லவனோ,
எ-து. ஓகாரம். அவனோ வல்லவனோ என வினாவிநிற்றலின் வினா. நன்றோவன்று
தீதோவன்று, எ-து. ஓகாரம் அத்தன்மையில்லாமை தெளிந்தவழிநிற்றலின் தெளிநிலை.
நைதலின்ற நல்லறஞ்செய்கின்றாலோ வுயிருய்யும், எ-து. ஓகாரம் கழிந்ததற்கிரங்கி
நிற்றலின் கழிவு. ஓ ஓ பெரியன், எ-து. ஓகாரம் பெருமை மிகுதியை விளக்கிநிற்றலின்
சிறப்பு. அன்றியும் குற்றியோ மகனோ, எ-து. ஓகாரம் ஐயப்பொருளைத் தந்துநிற்றலின்
ஐயம். - நன்னூல். - "ஒழியிசை வினாச்சிறப் பெதிர்மறை தெரிநிலை,
கழிவசைநிலைபிரிப்பென வெட்டோவே." - தொல்காப்பியம். - "பிரிநிலை வினாவே
யெதிர்மறை யொழியிசை, தெரிநிலைக்கிளவி சிறப்பொடுதொகைஇ, யிருமூன் றென்ப
வோகா ரம்மே." (எ-று.) (3)
 

133.

எனவென்ப துவமை யெண்குணம் வினைபெய
ரிசைக்குறிப் பியலு மென்று மினைத்தே.
 
     (இ-ள்.) என வென்றீரிடைச் சொல்லா மாறுணர்த்துதும், இவையே உவமையும்,
எண்ணும், குணமும், வினையும், பெயரும், இசையும், குறிப்பும், எனவேழிடத்தும்
வரப்பெறும். (உ-ம்.) பூங்கொடி வீழ்ந்தென வீழ்ந்தாள், கொடும்புலி பாய்ந்தென
பாய்ந்தான், என வினையோடியைந்து வந்தவுவமை, கூற்றெனக் கொடுங்கண்,
காரெனயார்க்கும் பொழிந்தான், எனப்பெயரோடியைந்து வந்தவுவமை. ஒரோவிடத்து,
என்று, உவமையுருபாகவரும். அன்றியும், கடலெனக் காலெனக்கடுங்கட் கூற்றென,
உருமெனவூழித் தீயென, ஒன்றென விரண்டென மூன்றென; கல்லென்று முள்ளென்று;
என, என்று, எண்ணோடியைந்தன. வெள்ளென வெளிர்த்தது, வெள்ளென்று
வெளிர்த்தது; என, என்று, பண்போடியைந்தன. கொள்ளெனக் கொண்டான்,
கொள்ளென்று கொண்டான்; என, என்று, வினையோடியைந்தன.
ஊரெனப்படுவதுறையூர், ஊரென்று சொல்லப்படுவதுறையூர்; என, என்று,
பெயரொடியைந்தன. ஒல்லென வொலித்தது, ஒல்லென்றொலித்தது, என, என்று,
இசையோடியைந்தன. விண்ணென விசைத்தது, விண்ணென்றிசைத்தது; என, என்று,
குறிப்போடியைந்தன. பிறவுமன்ன. - தொல்காப்பியம். - "வினையே குறிப்பே யிசையே
பண்பே, யெண்ணே பெயரோ டவ்வறு கிளவியுங், கண்ணிய நிலைத்தே யெனவென்
கிளவி. என்றென் கிளவியு மதனோ ரற்றே." இவை மேற்கோள். எ-று. (4)
 

134.

உம்மையே யெதிர்மறை யெச்சமுற் றளவை
சிறப்பைய மாக்கந் தெளிவென வெட்டே.