94தொன்னூல்விளக்கம்
இவை யதிசயம். அன்றியு மித்தொடக்கத்தன. பலவுளவாயினு மவற்றை நிகண்டு திவாகர
முதலியவற்றின் கண்ணே காண்க. - தொல்காப்பியம். - "அந்திலாங்க வசைநிலைக்
கிளவியென், றாயிரண்டாகு மியற்கைத் தென்ப. - மாவென் கிளவி வியங்கோ ளசைச்
சொல். - அம்ம கேட்பிக்கும். - ஆங்க வுரையசை. - மியாயிக மோமதி யிகுஞ்சின்
னென்னு, மாவயினாறு முன்னிலை யசைச்சொல். - கொல்லேயையம்." - நன்னூல். -
"யாகா பிறபிறக்கரோ போமாதிகுஞ், சின்குரையோரும் போலு மிருந்திட், டன்றாந்தாந்
தான்கின்று நின்றசை மொழி. - மன்னேயசை நிலை யொழியிசை யாக்கங் கழிவு மிகுதி
நிலை பேறாகும். - விழைவேகால மொழியிசை தில்லை." இவை மேற்கோள். எ-று. (8)

நான்காமோத்துஇடைச்சொல்லியல். முற்றிற்று.
 

ஐந்தாமோத்து உரிச்சொல்லியல்.
Chapter V. - Attributives.
 

138.

உரிச்சொல் லென்ப வுரியபற் குணசொல்
லாகிப் பெயர்வினை யணைந்து வருமே.

     (இ-ள்.) மேலேவகுத்துக்கூறிய நால்வகைச்சொற்களுளிவ்வோத்தின் கண்ணே
யுரிச்சொல்லியல்பினை விளக்குதும். உரியெனப்படுவன பலவகைக்குணங்களை
யறிவிக்கும் பெயர்ச்சொற்களாம். இவ்வுரிச்சொல் குறிப்பும், பண்பும், இசையும், என
மூவகைப்படும். குறிப்பாவன - மனத்தாற்கு றித்தறியப்படுவன, பண்பாவன -
விழியாலறியப்படுவன, இசையாவன - செவியா லறியப்படுவன; இவற்றும்:-

     குறிப்புச்சொற்கள் வருமாறு:- சால், உறு, தவ, நனி, கூர், கழி, என்னுமாறு மிகுதி
யென்னுங் குறிப்பை யுணர்த்து வனவாம். (உ-ம்.) தென் மலை யிருந்த சீர்சான்
முனிவரன் - சால், உறுவளிதுரக்கும் - உறு, தவப் பல - தவ, நனிப்பயன்களை - நனி,
துனிகூரெவ்வமொடு-கூர், கழிநலம் - கழி, எனவரும். பையுள், சிறுமை, இரண்டும்
நோயையும்; இலம்பாடு, ஒற்கம், இரண்டும் வறுமையையும்; விறப்பு, உறப்பு, வெறுப்பு,
மூன்றுஞ் செறிவினையையும்; கறுப்பு, சிவப்பு, இரண்டும் வெகுளியையும்;
உணர்த்துவனாம். படர், எ-து. நினைத்தல் - செல்லுதல் - நோவு - மூன்றையும்;
செழுமை, எ-து. வளம்-கொழுப்பு - இரண்டையும்; தா, எ-து. வலி - வருத்தம் -
இரண்டையும்; உணர்த்து வனவாம். - நன்னூல். - 'சாலவுறுதவ நனிகூர் கழிமிகல்.' -
தொல்காப்பியம் - "பையுளுஞ்சிறுமையு நோயின்பொருள. - இலம்பாடொற்கமாயிரண்டும்
வறுமை. - விறப்பு முறப்பும் வெறுப்புஞ் செறிவே. - கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப்
பொருள. - படரே யுள்ளல் செலவுமாகும்.