96தொன்னூல்விளக்கம்

139.

அறிவரு ளாசை யச்ச மான
நிறைபொறை யோர்ப்புக் கடைப்பிடி மைய
னினைவு வெறுப்புவப் பிரக்கநாண் வெகுளி
துனிவழுக் காறன் பெளிமை யெய்த்த
றுன்ப மின்ப மிளைமை மூப்பிகல்
வென்றி பொச்சாப் பூக்க மறமத
மறவியினைய வுடல்கொ ளுயிர்க் குணந்
துய்த்தறுஞ்ச றொழுத லணித லுய்த்தலாதி
யுடலுயிர்த் தொழிற் குணம்.
 
     (இ-ள்.) உயிரின்குணமு முயிரின் றொழிற்குணமு மாமாணர்த்து தும். அறிவு,
அருள், ஆசை, அச்சம், மானம், நிறை, பொறை, ஓர்ப்பு, கடைப்பிடி, மையல், நினைவு,
வெறுப்பு, உவப்பு, இரக்கம், நாணம், வெகுளி. துணிவு, அழுக்காறு, அன்பு, எளிமை,
எய்த்தல், துன்பம், இன்பம், இளைமை, மூப்பு, இகல், வென்றி, பொச்சாப்பு, ஊக்கம்,
மறம், மதம், மறவி, என்கிற முப்பத்திரண்டு மிவைபோல்வனபிறவு முடம்போடுகூடிய
வுயிர்களின் குணங்களாம். துய்த்தல், துஞ்சல், தொழுதல், அணிதல், உய்த்தல்,
என்கிறவைந்து மிவைபோல்வனபிறவு முடம்போடுகூடிய வுயிரினுடைய
தொழிற்குணங்களாம். இதனுண்முன்னோர் உடல் கொளுயிர்க் குணமென்று
முடலுயிர்த்தொழிற் குணமென்றுஞ் சொன்னமையா லுடலிலாவுயிரு முளவெனக்கொள்க.
உயிருள்ளபொருள்க ளோரறிவுமுதலாக வாற றிவீறாகும். - தொல்காப்பியம். - "ஒன்றறி
வதுவே யுற்றறி வதுவே, யிரண்டறி வதுவே யதனொடு நாவே, மூன்றறி வதுவே
யவற்றொடு மூக்கே, நான்கறி வதுவே யவற்றொடு கண்ணே, யைந்தறி வதுவே
யவற்றொடு செவியே, யாறறி வதுவே யவற்றொடு மனனே, நேரிதி னுணர்ந்தோர்
நெறிப்படுத் தினரே. - புல்லு மரனு மோரறி வினவே, பிறவு முளவே யக்கிளைப்
பிறப்பே. - நந்து முரளு மீரறி வினவே, பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே. - சிதலு
மெறும்பு மூவறி வினவே, பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே. - நண்டுந் தும்பியு
நான்கறி வினவே, பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே. - மாவு மாக்களு மையறி
வினவே, பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே. - மக்க டாமே யாறறி வுயிரே, பிறவு
முளவே யக்கிளைப் பிறப்பே, ஒருசார் விலங்கு மது பெறற் குரிய." இவை மேற்கோள். எ-று. (2)
 

140.

பல்வகை வடிவிரு நாற்றமை வண்ண
மறுசுவை யூறெட் டுயிரல் பொருட்குணம்.
 
     (இ-ள்.) உயிரில்லாத பொருட்குண மாமாறுணர்த்துதும். சதுரம், நீளம், வட்டம்,
முக்கோண முதலிய வடிவுகளும்; இருவகை வாசங்களும்; வெண்மை, செம்மை,
பொன்மை, கருமை, பசுமை, எனவைவகை வண்ணங்களும்; கைப்பு, புளிப்பு, துவர்ப்பு
உவர்ப்பு, தித்திப்பு, கார்ப்பு,