சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

136 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

பொருந்தும். வேறுபடுத்தப்பட்ட பெயர்கொண்டு நோக்கின் தானும் வேறாகக் காணப்படுதலின், எழுவாயும் வேற்றுமை ஆயிற்று என்று சேனாவரையர் கூறிய செய்தியின் ஒரு பகுதியைக் குறிப்பிட்டுள்ளார்.
 
  ஏழு என்பது - பிரகற்பதியின் மதம்.
எட்டு என்பது - இந்திரன்மதம்.
 
 

ஏழு என்பார், விளியேற்றுமையை விளித்தற்கண்வரும் முதல் வேற்றுமை என்று
முதல் வேற்றுமைக்கண் அடக்கும்.
 

சூறாவளி
 

செயப்படுபொருள் முதலியவற்றின் வேறுபடுத்திய பொருள் மாத்திரம் உணர்த்தி
நிற்றலின் எழுவாயும் வேற்றுமையாயிற்று என்றார். அவ்வாறு கூறுவார்க்கு
விகாரத்தினின்றும் வேறுபடுதலின் இயல்பும் விகாரமேயாம் என வேண்டும் என்பது.
 

அமைதி
 

இவர் கருத்துச்சேனாவரையருடையது. தொல்.சொல்.62 அவருள், தானே
கொண்டாள்’ என்ற வழித் தான் எனப் பட்டான் பிறரில் பிரிக்கப்பட்ட வழிப் பிறரும்
அவனில் பிரிக்கப்பட்டனர் என்று கொள்வதுபோலவும்,

நிலத்திற்கு வன்மை இயல்பாகவும், நீர்நிலமும் சேற்று நிலமும் மிதித்துப் பின்
வன்னிலம் மிதித்தான் நிலம் வலிதாயிற்று என்று கூறும் வழக்கம் உண்மை போலவும்,
ஏனைய வேற்றுமைப் பொருள்களைக் கொண்டு நோக்க எழுவாய் வேற்றுமை அவற்றில்
வேறுபாடுடைத்தாதல், தன் இயல்பிற்றாகிய முகத்ததாகவே குரங்கு இருக்கவும்
அதனைமனிதன் தன் முகத்தோடு ஒப்பு நோக்கி வலிமுகம் என்று கூறுவது போன்ற
மரபை ஒட்டியதாம் எனச்சேனாவரையரும் இவ்வாசிரியரும் கூறியதன் அமைதியை
நோக்குக.