| ‘அளபெடைப் பெயரே அளபெடை இயல.’ | 115,122,140 |
|
| ‘முறைப்பெயர்க் கிளவி ஏயொடு சிவணும்.’ | 116 |
|
| ‘அயல்நெடி தாயின் இயல்பா கும்மே.’ | 126 |
|
| ‘முறைப்பெயர்க் கிளவி முறைப்பெயர் இயல.’ | 128 |
|
| ‘மெய்உயிர் இறுதி விரவுப் பெயர்ச்சொல் உயர்திணைப் பெயரொடும் ஒத்து நடக்கும்.’ | 131 |
|
| ‘ஆவியும் ஒற்றும் அந்தம் ஆகிய அஃறிணைப் பெயரெலாம் ஏயொடு சிவணும்.’ | 132 |
|
| ‘அம்ம அசைச்சொல் நீட்டமும் விளிக்கும்.’ | 133 |
சிறப்பு விதி (208-215)
|
208. | ஐஇறு பொதுப்பெயர்க்கு ஆயும் ஆவும் உருபாம் அல்லவற்று ஆயும் ஆகும். | |
இஃது ஐகார ஈற்றுப் பொதுப் பெயர்க்கு அவ்வைகாரம் ஆய்- ஆயும் ஆ- ஆயும் திரிந்து விளியேற்றலும், உயர்திணை அஃறிணைப் பெயர்க்கு அஃது ஆயாய் ஈறுதிரிந்து விளியேற்றலும் உருபாம் என்றவாறு. வரலாறு: அன்னை- அன்னாய். |
| ‘அன்னா அன்னா அலந்தேன் எழுந்திராய்’, அத்தை- அத்தாய் அத்தா எனவும், நங்கை- நங்காய், மடந்தை- மடந்தாய் எனவும், ‘சிறுமீன் கவுள்கொண்ட செந்தூவி நாராய்’ | ஐங்குறு. 68 |
|
| ‘கொன்றாய் குருந்தே கொடிமுல்லாய் வாடினீர்’ | திணை.நூற்.81 |
|
| எனவும் வரும். | 50 |
விளக்கம்
|
எய்தியது- சென்ற நூற்பாவான் எய்திய இயல்பும் ஏகாரம் பெறுதலும் ஆகிய விளியேற்கும் நிலை. |