சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-51213

சில-துறைவன் துறைவ- ஊரன் ஊர-என அன் ஈறு அண்மைக்கண் ஈறு
கெடுதலும்,

சில-நம்பன் நம்பான்- எம்பெருமன் எம்பெருமான்- என அன்ஈறு ஈற்று அயல்
நீடலும், சிலதுறைவன் துறைவா- ஊரன் ஊரா- சோழன் சோழா- என அன் ஈறு அயல்
நீண்டு ஈறு கெடுதலும் (ஏடா என்பது படர்க்கைப் பெயர் ஆகாது, தோழன்
முன்னிலைப் பெயராயே தோழா என்னும் பொருட்டாய் நிற்பது ஒன்று ஆதலின்
ஈண்டைக்கு ஆகாது என்க,)

சில-ஐயன் ஐயாவோ- அன்பன் அன்பாவோ- என அன்ஈறு புலம்பின்கண் ஈறு
அழிந்து அயல் நீண்டு பிறிது வந்து அடைதலாய் ஓகாரம் மிகுதலும்,

சில- வந்தான் வந்தாய்- சென்றான் சென்றாய்- என ஆன் ஈறுஇறுதி
யவ்வொற்றாயும்,

சில-வாயிலான் வாயிலோயே எனஆன் ஈறும், கிழவன்-

  ‘பெருங்கல் வைப்பின் நாடு கிழவோயே’

புறம். 212

  ‘மாயன்-மாயோயே’

பரிபாடல். 3

என அன்ஈறும் அயல்திரிந் துஇறுதி யகர ஒற்றாய் ஏகாரம் மிகுதலும்,

சில-ஐயன், ‘ஐயே எமக்கு இங்கு அருள்’-

  முருகன்- ‘மடவை மன்ற வாழிய முருகே’

நற்- 34

என அன்ஈறு ஈறு அழிந்து அயலில்அகரம் ஏகாரம் ஆதலும் விளி உருபாம்
என்றவாறு.

 
  பிறவும் அன்ன.
ஒருசார் என்பதனை விளி அதிகாரம் முடிவு அளவும் உய்த்து உரைக்க.

 51


விளக்கம்
 

  எய்தியது- 207 ஆம் நூற்பாச் செய்தி.