சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-62235

  ‘மூன்றுஐந் தொடுஆறு கரணம் பெறும்முரட் கோளியதே
மூன்றுஇரு மூன்றொடு நான்காம்’

வீ.சோ.43

என்று மயக்கம் பற்றிக் குறிப்பிடும்.
                    நேமிநாத நூலார் சுருக்கமாக,
 
  ‘வேற்றுமை ஒன்றன் உரிமைக்கண் வேறொன்று
தோற்றல் உருபு தொகவருதல்- ஏற்றபொருள்
மாறினும் தானிற்றல், வந்துஒன்றின் ஒன்றேற்றல்
தேறவரும் மெய்ந்நூல் துணிபு.’

நே.சொல்.21

என்ற நூற்பாவால் பொருள்மயக்கம், உருபுமயக்கம் உருபுதொகுதல்,
பிறிதுபிறிதேற்றல் என்பனவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.

இனி, இலக்கணக்கொத்து நூலார் ஒப்பாய் நிற்கும் உருபுகளும், ஒருபொருட்கே
பலஉருபுகள் வருவனவும், வேறு உருபுகள் வருவனவும், ஆகிய மூவிலக்கணமும்
ஒருங்கே தோன்ற வினைமுதல் முதலாகச் செய்த சிறப்பு நூற்பாக்களாகியவை:
 

  ‘ஒன்று மூன்றுநான்கு ஆறெனும் உருபொடு
வருமே வினைதல் எனவகுத் தனரே’

44

  ‘எல்லா உருபொடும் செயப்படு பொருள்எழும்.’

45

  ‘ஒன்று மூன்றுநான்கு ஐந்தாறு உருபொடு
கருவி வருமெனக் கருதினர் பெரியோர்.’

46

  ‘எல்லா உருபொடும் கொள்வோன் எழுமே.’

47

  ‘இரண்டுநான் கைந்தொடு எழுமே நீக்கம்.’

48

  ‘நான்கைந்து ஆறே ழொடுகுறை நடக்கும்.’

49

  ‘ஒன்றிரண்டு நான்கே ழோடிடம் எழுமே.’

50