தொல்காப்பியச் சொற்படல 89ஆம் நூற்பா உரையை நச்சினார்க்கினியர் “முன்னக்கூறிய எல்லாம் பண்பும் தொகையிலும் பொருள்தொடர்ச்சியும் பற்றி வருதலும் கொள்க” எனக்கூறி, மணியது நிறத்தைக் கெடுத்தான்- மணியை நிறத்தின்கண் கெடுத்தான்- மணியை நிறத்தைக் கெடுத்தான்- எனவும், தலைமகனது செலவை அழுங்குவித்தாள் தலைமகனைச் செலவின்கண் அழுங்குவித்தாள்- தலைமகனைச் செலவை அழுங்குவித்தாள்- சாத்தனை நூலை ஓதுவித்தாள் யாற்றை நீரை விலக்கினான்- எனவும் கூறியவற்றை இவ்வாசிரியரும் குறித்துள்ளவாறு காண்க. |
ஒத்த நூற்பாக்கள்: |
| ‘முதல்சினைக் கிளவிக்கும் அது என் வேற்றுமை முதற்கண் வரினே சினைக்குஐ வருமே.’ | தொல்.சொல்.87 |
| ‘முதல்முன் ஐவரின் கண்என் வேற்றுமை சினைமுன் வருதல் தெள்ளிது என்ப.’ | 88 |
| ‘ஒருவினை ஒடுச்சொல் உயர்பின் வழித்தே.’ | 91 |
| ‘அதுவென்.............குகரம் வருமே.’ | 194 |
| ‘முதலை ஐ-உறின் சினையைக் கண்ணுறும் அதுமுதற்கு ஆயின் சினைக்கு ஐ ஆகும்.’ | நன்.375 |
| ‘முதற்குஆறு ஆயின் சினைக்குஇரண்டு ஆகும்.’ | மு.வீ.பெ.71 |
| ‘மூன்றிற்கு ஓதிய ஒருவினை ஒடுச்சொல் உயர்திணை உணர்த்தும் பெயர்வழித் தோன்றும்.’ | 73 |
| ‘உயர்திணை மருங்கின்நால் ஆறும்ஒத்து இயலும்.’ | 76 |
முதல்சினை, பிண்டம் பிண்டித்த பொருள்கள்- இவற்றது இயல்பு
|
222. | முதல்இவை சினைஇவை எனவேறு உளஇல உரைப்போர் குறிப்பின் அற்றே பிண்டமும். | |