சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

வினையியல்-நூற்பா-16331

விளக்கம்
 

தொல்காப்பியனார் உம் ஈறு நிகழ்காலமும் எதிர்காலமும் காட்டும் என்றார். இவர்
நிகழ்காலத்துக்குக் கின்ற என்ற ஈறு கொண்டார்.

பெயரெச்சம் மூன்று காலத்தும் இருதிணை ஐம்பால் மூவிடத்தின்கண்ணும்
வருதலை விளக்கி, வினையெச்சத்திற்குச் செய்து என்ற இறந்தகால வாய்பாட்டு
எடுத்துக்காடடுக்களே தந்துள்ளார், ஏனைய விரிநூற்பாக்களான் விளக்கப்படுதல் கருதி.

இதனால் எதிர்காலத்திற்கு உரிய செய்யும் என்னும் பெயரெச்சம் இருதிணை
ஐம்பால் மூவிடங்களுக்கும் உரியதாதல் பெறப்படும்.
 

ஒத்த நூற்பாக்கள்
 

  ‘காலமும் வினையும் தோன்றிப்பால் தோன்றாது
பெயர்கொள் ளும்மது பெயரெச் சம்மே’. அகத்தியம்.

‘காலமும் வினையும் தோன்றிப்பால் தோன்றாது
வினைகொள் ளும்மது வினையெச் சம்மே’. அகத்தியம்

‘பெயரெஞ்சு கிளவி பெயரொடு முடிமே’.

‘பிரிநிலை வினையே பெயரே.........
நெறிப்படத் தோன்றும் எஞ்சுபொருட் கிளவி’.

‘வினையெஞ்சு கிளவிக்கு வினையும் குறிப்பும்
நினையத் தோன்றிய முடிபா கும்மே’.

‘பெயர்வினைச் சொல்லொழிபு
..... தத்தம் எச்சம் கொள்ளும்.’







தொல்.சொல்.431

428


430


நன். 360