இது, பெயரெச்சத்திற்கு எய்தியதன் மேல் சிறப்புவிதி கூறுகின்றது, இத்துணை வாய்பாட்டான் நிகமும் எனவும் இத்துணைப் பொருட்பகுதி பற்றி வரும் பெயர்களான் முடியும் எனவும் கூறுகின்றமையின். இ-ள்: முற்கூறிய எச்சங்கள் இரண்டனுள் செய்த- செய்கின்ற- செய்யும்- என்னும் முறையே முக்காலமும் காட்டும் வாய்பாட்டான் புலப்பட்டுத் தொழில்முதல்நிலை எட்டனுள் இன்னதற்காக- இது பயனாக- என்னும் இரண்டும் ஒழித்து வினைமுதல் முதலாயின ஏனை அறுவகைப் பொருள்களையும் உணர்த்தும் பெயர்களொடுமுடியும் இயல்பினை உடையது பெயரெச்ச வினைச்சொல்லாம் என்றவாறு. வரலாறு: ஆடிய கூத்தன்- வென்றவேல்- புக்க இல் போயின போக்கு- வந்தநாள்- உண்டசோறு- எனவும், ஆடுகின்ற கூத்தன்- வெல்கின்றவேல்- புகுகின்றஇல்- போகின்ற போக்கு- வருகின்ற நாள்- உண்கின்ற சோறு- எனவும், ஓதும் பார்ப்பான்- வனையுங்கோல்- வாழும்இல்- உண்ணும்ஊண்- துயிலுங்காலம்- கற்கும் நூல்- எனவும் வினைமுதல்பொருளும் கருவிப்பொருளும் நிலப்பொருளும் |