சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

346 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்



 

‘கல்லாக்கழிப்பர் தலையாயர் நல்லவை
துவ்வாக்கழிப்பர் இடைகள்
 


நாலடி. 366
எனவும் பின்வரும் தொழிற்கு இடையீடு இன்றி விரைவு உணர்த்தி முன்வரும்
தொழில்மேல் இறந்தகாலம் பற்றி வரும். பகர உகரம்.
 
  ‘பல்கால், வாக்குடி தரத்தர வருத்தம் வீட
ஆர உண்டு’

‘புலராப் பச்சிலை இடை இடுபு தொடுத்த’

பொருந. 86-88

புறம். 33
 
என இறந்த காலம் பற்றிவரும். உரிஞுபு என உகரமும், கற்குபு எனக் குகரமும்
ஏற்றவழிப் பெறுதல் கொள்க.

என-என்பது சோலைபுக்கென வெப்பம் நீங்கிற்று- உண்டெனப் பசிகெட்டது-
உரைத்தென உணர்ந்தான்- மருந்து தின்றெனப் பிணிநீங்கிற்று- என முடிக்கும்
சொல்லான் உணரப்படும் தொழிற்குத் தன்முதல்நிலைத் தொழில் காரணமாய் விரைவு
உணர்த்திக் கடதறக்களை ஊர்ந்து இறந்தகாலம் பற்றிவரும். ளஞ்சியென- உரிஞியென-
என ஏனை எழுத்தோடும் வருமாறு அறிந்து ஒட்டிக்கொள்க.

அகரம்- ஞாயிறுபடவந்தான் என, இது நிகழாநிற்க வந்தான் எனும் பொருட்டாய்
நிகழ்காலம் பற்றிவரும். வாழச் செய்த நல்வினை என்பதூஉம் அது.

இன்- மழைபெய்யின் குளம் நிறையும்-மெய்உணரின் வீடு எளிதாம்- எனக்
காரணப்பொருட்டாய் எதிர்காலம் பற்றிவரும். நடப்பின்- உரைப்பின்- என ஏற்றவழிப்
பகரம் பெற்று வருதலும் கொள்க.

இய, இயர்- என்பன உண்ணிய- தின்னிய- உண்ணியர்- தின்னியர்- என
எதிர்காலம் பற்றி வரும். போகிய- போகியர் என ஏற்றவழிக் குகரம் பெற்று வருதலும்
கொள்க.

வான்பான்- பாக்கு- என்பன முறையே,