சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

440 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  ‘இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றி’

(தொல்.சொல்.297)

எனவும் உம்மை எண்ணின்கண் இரண்டாவதும் ஏழாவதும் தொகும் எனவும், தொகுதல் வரையப்படாது எனவும், ஏனை எண்ணின்கண் வரையப்படும் எனவும் கொள்க.

இவ்வாறு பிற வருவன உளவேல் அவையும் இப்புறனடையானே அமைத்துக் கொள்க.

மூன்றாவது இடைச்சொல்லியல் முற்றிற்று.
 

விளக்கம்
 

தொறு என்பதும் தோறு என்பதும் தாம் சார்ந்த மொழிக்குப் பன்மையும் இடமும் உணர்த்துதலை நச்சினார்க்கினியர் தொல்.சொல்.298. இல் சுட்டியுள்ளார்.

ஆ என்பது வியப்பு உள்வழியும் மறுத்தல் உள்வழியும் பொருள் உணர்த்துதலை தொல்.சொல். 298-உரையிலும் அஃது இரக்கக் குறிப்பாய் வருதலைச் சிந்தாமணி 1804 ஆம் செய்யுள் உரையிலும் அவர் குறிப்பிட்டுள்ளார்; தொல். சொல். 284- உரையிலும் குறித்துள்ளார்.

என என்எச்சம் விரைவு பெருக்கம் என்ற பொருள்களின் வருதலும் அவர் 298இல் குறித்தனவே.
 

  ‘ஈரளபு இசைக்கும் இறுதியில் உயிரே
ஆயியல் நிலையும் காலத் தானும்
அளபெடை நிலையுங் காலத் தானும்
அளபெடை இன்றித் தான்வரு காலையும்
உளஎனப் படுப பொருள்வேறு படுதல்
குறிப்பின் இசையான் நெறிப்படத் தோன்றும்.’

தொல்.சொல்.231


இந்நூற்பா உரையில், ஒள ஒளஉ என்பன பற்றிய விளக்கமும், இக்காலத்து ஒள
என்பது ஓகார மாய்த்திரிந்து அப்பொருள்கள் படுமாறும் சேனாவரையரால்
உரைக்கப்பட்டன.