மேல் எழுத்தோத்தினுள் கூறிய அக்கொற்றன்- அவன் முதலியனவும், ஆங்கு, ஈங்கு- என அவை நீண்டு வந்தன யாவன்- எப்பொருள்- உண்கா- எவன்- என்பனவும், முறையே சுடடுப் பொருளும் வினாப் பொருளும் உணர்த்தி நிற்றலும், ஆன்- ஏன்- ஓன்- இத்தொடக்கத்து எழுத்துச் சாரியையும், எடுத்து ஓதாதன பிறவும் கொள்க. இனி ஆர் என்னும் இடைச்சொல். | | ‘பெயரின் ஆகிய தொகையுமார் உளவே’ | தொல்.சொல்.67 | என-உம்மை முன்னரும், | | ‘எல்லா உயிரொடும் சொல்லுமார் முதலே’ | தொல்.61 | என-உம் ஈற்று வினை முன்னரும், அசைநிலையாய் வருதலும், | | ‘மலைநிலம் பூவே துலாக்கோல் என்றின்னர்’ | தொல்.எழு பாயி. | எனவும், | | ‘தோற்றம் இசையே நாற்றம் சுவையே உறலோடு ஆங்குஐம் புலன்என மொழிப’ | | எனவும், சொல்தொறும் வாராது எண் ஏகாரம் இடையிட்டு வரினும் எண்ணும் பொருட்டு ஆதலும், சாத்தனும் வந்தான்; கொற்றன் இனி வரலும் உரியன் என, எச்சஉம்மை நின்றவழி எஞ்சு பொருட்கிளவியாம் எதிர்மறை உம்மைத்தொடர் வந்து தம்முள் மயங்குதல் எனவும், | | ‘பாட்டும் கோட்டியும் அறியாப் பயமில் தேக்கு மரம்போல் நீடிய ஒருவன்’ | | எனவும், |
|
|
|