| இ-ள்: ‘குருமணித்தாலி’ | |
எனவும் |
| ‘நறுஞ்சாந்து புலர்ந்த கேழ்கிளர் அகலம்’ | மதுரைக். 493 |
எனவும் குருவும் கெழுவும் ஆகிய இரண்டு உரிச்சொற்களும் நிறன் என்னும் பண்பு உணர்த்தலும், |
| ‘நொசிபடு மருங்குல் கசிபடக் கைதொழா’ | |
எனவும், |
| ‘இழைமருங்கு அறியா நுழைநூல் கலிங்கம்’ | மலைபடு.561 |
எனவும் |
| ‘நுணங்குதுகில் நுடக்கம் போல’ | நற்.15 |
எனவும் நொசிவும் நுழைவும் நுணங்கும் ஆகிய மூன்றும் நுண்மை ஆகியபண்பு உணர்த்தலும் பொருந்தும் என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. 4 |
விளக்கம் |
நன்னூலார் உரியியலில் உயிர்ப் பொருள்களின் குணப் பண்பு அவற்றிற்கு உரிய தொழிற்பண்பு என்பனவற்றை விளக்கியுள்ளார்; உயிரல் பொருள்கள் உணர்தல் தன்மைய அன்மையின் அவற்றிற்குத் தம்வயத்தனவாகத் தாம் அறிந்து செய்யும் தொழில் இல்லை என்று கொண்டு அவற்றின் குணப்பண்பை விளக்கினார்; பின் உயிர்ப் பொருள் உயிரல் பொருள் இரண்டற்கும் பொதுவாகக் காணப்படும் தொழிற்பண்புகளையும் விளக்கியுள்ளார். |
ஒத்த நூற்பாக்கள் |
| ‘குருவும் கெழுவும் நிறன் ஆ கும்மே.’ | தொல்.சொல்.301 |
| ‘நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை.’ | 374 |
| ‘அறிவுஅருள் ஆசை அச்சம் மானம் நிறைபொறை ஓர்ப்புக் கடைப்பிடி மையல் | |