சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

உரிச்சொல்இயல்-நூற்பா-5463

இது பண்பு உணர்த்துவனவற்றுள், தாம் ஒன்றாகின்று பலபொருள் உணர்த்தும் உரிச்சொற்கள் இவை என்கின்றது.
 

  இ-ள்: ‘வார்ந்து இலங்குவைஎயிற்றுச் சின்மொழி
அரிவையை’
குறுந்.14
எனவும்,
 
  ‘தெள்அறல் தழீஇய வார்மணல் அடைகரை’ அகம்.34
எனவும்,
 
  ‘போகுகொடி மருங்குல்’
 
எனவும்,
 
  ‘திரிகாய் விடத்தரொடு கார்உடை போகி’ பதிற்.13
எனவும்,
 
  ‘ஒழுகுகொடி மருங்குல்’
 
எனவும்,
 
  ‘மால்வரை ஒழுகியவாழை’ சிறுபாண்.21
எனவும், வார்தலும் போகலும் ஒழுகலும் ஆகிய உரிச்சொற்கள் நேர்மையும் நெடுமையும் ஆகிய பண்பு உணர்த்தலும்,
 
  ‘வலிதுஞ்சு தடக்கை வாய்வாள் குட்டுவன்’ புறம்.394
எனவும்,
 
  ‘தடமருப்பு எருமை’ நற்.120
எனவும் தட என்னும் உரிச்சொல் பெருமையும் கோட்டமும் ஆகிய பண்பு
உணர்த்தலும்,
 
  ‘இரும்பிடி கன்றொடு விரைஇக் கயவாய்ப்
பெருங்கை யானை’
அகம்.118
எனவும்,