| ‘கயந்தலை மடப்பிடி’ | நற்.137 |
எனவும் கய என்னும் உரிச்சொல் பெருமையும் மென்மையும் ஆகிய பண்பு உணர்த்தலும், |
| ‘நளிமலை நாடன்’ | புறம்.150 |
எனவும் |
| ‘சிலைப்பு வல்லேற்றின் தலைக்கை தந்துநீ நளிந்தனை வருதல் உடன்றனள் ஆகி’ | பதிற்.52 |
எனவும் நளி என்னும் உரிச்சொல் பெருமையும் செறிவும் ஆகிய பண்பு உணர்த்தலும் இயல்பு என்று சொல்லுவர், இலக்கணங்களை அறிந்தோர் என்றவாறு. |
ஒத்த நூற்பாக்கள்
|
| ‘வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்வும் நெடுமையும் செய்யும் பொருள.’ | தொல்.சொல்.317 |
|
| ‘தடவும் கயவும் நளியும் பெருமை.’ | 320மு.வீ.ஒ.40 |
|
| ‘அவற்றுள் தடஎன் கிளவி கோட்டமும் செய்யும்’. | தொல்.சொல்.321 |
|
| ‘கயஎன் கிளவி மென்மையும் ஆகும்.’ | 322 |
| ‘நளிஎன் கிளவி செறிவும் ஆகும்.’ | 323 |
| ‘நளி செறிவாம்’ | நே.சொல்.59 |
இசையுணர்த்தும் உரிச்சொற்கள் (285,286) தாம்பலவாய் நின்று ஒருபொருள் உணர்த்துவன:
|
285 | கம்பலை சும்மை அரவம் கண்ணலும் துவைத்தல் சிலைத்தல் இயம்பல்இசை சுட்டலும் உரிய என்மனார் உணர்ந்திசி னோரே. | |