சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

உரிச்சொல்இயல்-நூற்பா-6465

இது நிறுத்த முறையானே இசை உணர்த்துவனவற்றுள் தாம்பலவாய் நின்று ஒருபொருள் உணர்த்தும் உரிச்சொற்கள் இவை என்கின்றது.
 

  இ-ள் ‘களிறுகவர் கம்பலைபோல’ அகம்.96
எனவும்
 
  தளிமழை தோயும் தண்பரங் குன்றின்
கலிகொள் சும்மை ஒலிகொள் ஆயம்
மதுரைக்.
263-4
எனவும் கம்பலையும் சும்மையும் ஆகிய இரண்டு உரிச்சொற்களும் அரவம் ஆகிய இசைப் பொருண்மையை உணர்த்தலும்,
 
  ‘முரசுகடிப்பு இகுப்பவும்’ புறம்.158
எனவும்,
 
  ‘ஆமான் நல்லேறு சிலைப்ப’ முருகு.315
எனவும்,
 
  ‘கடிமரம் தடியும் ஓசை தன்னூர்
நெடுமதில் வரைப்பின் கடிமனை இயம்ப’
புறம்.36
எனவும் துவைத்தலும் சிலைத்தலும் இயம்பலும் ஆகிய உரிச் சொற்கள் மூன்றும் இசைஎன்னும் அசைப் பொருண்மை உணர்த்தலும் உரிய என்று கூறுவர் அறிந்தோர் என்றவாறு.
   
 

ஒத்த நூற்பாக்கள்
 

  ‘கம்பலை சும்மை கலியே அமுங்கல்
என்றிவை நான்கும் அரவப் பொருள.’
தொல்.சொல்.349

 
  ‘துவைத்தலும் சிலைத்தலும் இயம்பலும் இரங்கலும்
இசைப்பொருட் கிளவி என்மனார் புலவர்’
358