கலி என்னும் உரிச்சொல் அரவம் ஆகிய இசைப் பொருண்மையும் செருக்கு ஆகிய குறிப்புப் பொருண்மையும் உணர்த்தலையும், |
| ‘உயவுப்புணர்ந் தன்றுஇவ் வழுங்கல் ஊரே’ | நற்.203 |
எனவும், |
| ‘பழங்கண் ணோட்டமும் நலிய அழுங்கினன் அல்லனோ அயர்ந்ததன் மணனே’ | அகம்.66 |
எனவும், |
| ‘குணன் அழுங்கக் குற்றம் உழைநின்ற கூறும் சிறியவர்கட்கு.’ | நாலடி.353 |
எனவும் அழுங்கல் என்னும் உரிச்சொல் அரவம் ஆகிய இசைப் பொருண்மையும் இரக்கமும் கேடும் ஆகிய குறிப்பும் பொருண்மையும் உணர்த்தலும், |
| ‘ஏறுஇரங்கு இருளிடை இரவினில் பதம்பெறான்’ | கலி.46 |
எனவும், |
| ‘செய்து இரங் காவினைச் சேண்விளங் கும்புகழ்’ | புறம்.10 |
எனவும் இரங்கல் என்னும் உரிச்சொல் இசைப்பொருளும் ஒரு பொருளது கழிவால் பிறந்த வருத்தம் ஆகிய குறிப்புப் பொருளும் உணர்த்தலும் பொருந்தும் என்று கூறுவர் அறிந்தோர் என்றவாறு.இசை அன்றிக் குறிப்பு உணர்த்தினும் பலபொருட்டு முதல் பற்றிக் குறிப்பும் உடன் ஓதினார். 7 |
விளக்கம் |
ஒத்த நூற்பாக்கள் முன்னர்க் காட்டப்பட்டனவற்றுள் காண்க. |