சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

உரிச்சொல்இயல்-நூற்பா-8,9469

என்பது பெறப்படும் என ஐயம் அகற்றியவாறு எனக் கொள்க. வரலாற்று முறைமையால் பொருள் உணர்த்தாவாயின், குழுவின் வந்த குறிநிலை வழக்குப்போல் இயற்சொல் எனப்படா என்பது.                                             8
 

விளக்கம்
 

உரிச்சொற்கள் ஒரு பொருட்கே பலவாக வருதலையும், ஓரிருச்சொற்கே பல
பொருள் வருதலையும் உட்கொண்ட மணாக்கன் இங்ஙனம் கொள்ளுதல் ஏனைய
பெயர்வினைபோல வரலாற்று முறைமையான் வருவதோ அன்றி ஆசிரியன்
ஆணைபற்றி வருவதோ என்று ஐயுறுதல்கூடும் என்று, முன்னும் பின்னும் வருகின்ற
சொற்பொருள் ஓர்ந்து இன்ன உரிச்சொல் இன்ன பொருட்கண் வந்துள்ளது என்பதனை
வரலாற்றுமுறை பற்றியே கொள்ளல் வேண்டுமே யன்றி இதன்கண் ஆணை எதுவும்
இல்லை என்பதனை இந்நூற்பா விளக்குகிறது. எனவே பெயரையும் வினையையும்
சார்ந்து வரும் உரிச்சொற்கள் பொருள்படுமாறு இந்நூற்பாவான் உணர்த்தப்பட்டவாறு.
உரைமுழுதும் சேனாவரையர் உரையே. தொல்.சொல்.389
 

ஒத்த நூற்பாக்கள்
 

  முழுதும்  தொல்.சொல்.389


உரிச்சொற் பொருட் புறனடை:
 

288. கூறிய கிளவிப் பொருள் நிலை அல்ல
வேறுபிற தோன்றினும் அவற்றொடு கொளலே.

 

இது முற்கூறிப்போந்த உரிச் சொற்கு ஆவதொரு பொருட் புறனடை கூறுகின்றது.

இ-ள்: முன்னும் பின்னும் வருபவை நாடிய வழி முற்கூறிய உரிச்சொற்களின்
பொருள் நிலைமை அல்லாத வேறு பொருள் தோன்றும் ஆயினும்
முற்கூறப்பட்டனவற்றொடு அவற்றையும் உரிச்சொல்லாகக் கொள்க என்றவாறு ‘தாவாத
இல்லை வினைகளும்’ என்புழித் தா-கேடும், ‘நுணங்கு கொடியின்’ என்புழி நுணங்கு
நுடக்கமும் உணர்த்தியவாறு கொள்க. பிறவும் அன்ன. 9