இஃது உரிச்சொற்கு எழுத்துப்பிரிந்து இசைத்தல் இன்று என ஐயம் அகற்றுகின்றது. இ-ள்: முதல்நிலையும் இறுதிநிலையுமாக எழுத்துக்கள் பிரிந்து வேறுபொருள் உணர்த்துதல் உரிச்சொல்லிடத்து இயல்பு உடைத்தன்று என்றவாறு. பிரிந்து இசைத்தல் இவண்இயல்பு இன்று எனவே, திரிந்து இசைத்தல் இவண் இயல்பு உடைத்து என்பதூஉம், பிரிந்து இசைத்தல் பிறாண்டு இயல்பு உடைத்து என்பதூஉம் கொள்க. உரிச்சொல் எழுத்துத்திரிந்து இசைத்தன. |