சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

உரிச்சொல்இயல்-நூற்பா-10471

  ‘நனந்தலை உலகம்’
 
எனவும்
 
  ‘பதவுமேயல் அருந்து மதவுநடை நல்லான்’
 
எனவும் வருவன போல்வன. பிறவும் அன்ன.

எழுத்துப் பிரிந்து இசைத்தன: நடந்தான்- நடந்தாள்- என்பன போலும்
வினைச்சொல்லும், தமன்- தமள்- என்பன போலும் ஒட்டுப்பெயரும் ஆம். அவை
முறையே வினையியலுள்ளும், பெயரியலுள்ளும் கூறிப்போந்தன. பிரிதலும் பிரியாமையும்
தாமாகப் பொருள் உணர்த்துவனவற்றிற்கே ஆகலின், கூறை கோட்படுதல் கடவுளர்க்கு
எய்தாதவாறு போல இடைச்சொற்கு இவ்வாராய்ச்சி எய்தாமை அறிக. தவ-நனி-என்னும்
தொடக்கத்தன குறிப்பு வினையெச்சம் போலப் பொருள் உணர்த்தலின் அவைபோலப்
பிரிக்கப்படும் கொல்லோ என ஐயுறாமையை அமைத்து அகற்றியவாறு
இச்சூத்திரத்திற்குக் கருத்தாதல் அறிக. 10
 

விளக்கம்
 

சேனாவரையர் உரை (தொல்.சொல்.395) தழுவப்பட்டுள்ளது. ‘நனவு’ நன எனவும்,
‘மத’ மதவு எனவும் இருந்தன. இடைச்சொல் தனித்து நடக்கும் சொல் அன்மையின்,
முழுச்சொல்லே தனித்து நடவாதபோது அதனைப் பிரித்தல் இயலாது என்பது
தானாகவே போதரும் என்பது.
 

ஒத்த நூற்பாக்கள்
 

  முழுதும்  தொல்.சொல்.395


உரிச்சொற் புறனடை
 

290. அன்ன பிறவும் கிளந்த அல்ல
பன்முறை யானும் பரந்தன வரூஉம்
உரிச்சொல் எல்லாம் பொருட்குறை கூட்ட
இயன்ற மருங்கின் இனைத்தென அறியும்
வரம்பு தமக்கு இன்மையின் வழிநனி கடைப்பிடித்து
ஓம்படை ஆணையின் கிளந்தவற்று இயலான்
பாங்குற உணர்தல் என்மனார் புலவர்.