சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

70 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

களாய்த்திரிதலைப் பிரயோக விவேக நூலாகும் கொண்டா (பி.வி. 2-உரை) இங்ஙனம்
விரித்துக்கூறியும் முடிவு பெறாமையின், இவ்வாசிரியர் இவற்றைத்தம் சுருக்க நூலில்
பெரும்பயன் இன்மைகருதி விரிக்காது விடுத்தார் என்க.
 

சூறாவளி
 

வடமொழி இலக்கணம் அறியாதார் ஈண்டுக் கூறியவற்றுள் பொருந்துவனவும்
பொருந்தாதனவும் உள. அவை ஓர்ந்து உணர்க. இவ்வெழுத்து இவ்வெழுத்தாயத் திரிந்து
வரும் என வரையறுத்து ஓதப்புகின், அவற்றையறையின் பிறழ்ந்தும் வருதலின் இங்ஙனம்
ஓதிலம் என்றார். புணர்ச்சி முதலிய ஏனை விதிகளும் கூறியவரையறையின் பிறழ்ந்தும்
வருதலின் அன்றே புறனடை முதலியவற்றான் அமைத்தார் அவற்றையும் இக்கருத்தே
பற்றி ஓதாதுஒழிய மறந்தார் போலும். இங்ஙனம் கூறுவார்க்கு நூல் செய்தும் எனத்
தொடங்குதலும் கூடாது என்க.
 

அமைதி

 

வடசொற் புணர்ச்சி வடமொழி மரபுபற்றித் தமிழ் வழங்குவதும், தமிழ்மரபுக்கேற்ப
அமைந்து வழங்குவதும் என இருநிலையில் காணப்படுகிறது. தமிழில் அருகியே வழங்கும்
வடமொழிச் சொற்புணர்ச்சியை விரித்துக் கூறுவது சுருக்க நூலாகிய இதற்குப்
பெரும்பயன் இன்று என்று இவ்வாசிரியர் கொண்ட கருத்தைமுற்ற ஏலாது, தமிழ்மொழிப்
புணர்ச்சிக்கும் வடமொழிப் புணர்ச்சிக்குத் தாம் பின்பற்றிய முறையையே இவர் பின்பற்றி
யிருத்தல் வேண்டும் என்று கூறுதற்கண் உள்ள பொருத்தமின்மையை நோக்குக.
 

ஒத்த நூற்பாக்கள்:
 

 ‘வடசொல்... ... ... சொல்லாகும்மே.’
‘சிதைந்தன... ... ... வரையார்.’
தொல். சொல்.401
402