சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-63711

பிரயோகவிவேகநூலாரும் தம் 11ஆம் நூற்பா உரையைச் சுட்டினார்.

இவ்வெடுத்துக்காட்டுக்களை மயிலைநாதரும் தந்துள்ளார். (நன்.399) நேமிநாதஉரையாசிரியரும் இக்கருத்தினரே.

நன்னூல் விருத்தியாசிரியர் இம்மாடுயான் கொண்டது- இவ்வெழுத்து யான்
எழுதியது- இவ்வெழுத்தாணி யான் எழுதியது- இவ்வீடு யான் வாங்கியது- இத்தொழில்
யான் செய்தது- இந்நாள் யான் பிறந்தது- என எடுத்துக்காட்டுக்கள் தந்து, “இல்லம்
மெழுகிற்று என்பதொரு வழக்கு இன்மையானும், எழுத்தாணிக்கு எழுதுதல்
தொழிலாகலானும் அவை எடுத்துக்காட்டாகா” என்று கூறியுள்ளார். (நன்-400 விருத்தி)
 

ஒத்த நூற்பாக்கள்
 

 

முழுதும்-
‘...............................................தன்வினையால்
செய்யப் படும்பொருளைச் செய்ததெனச் சொல்லுதலும்
எய்தப் படும்வழக்கிற்கு ஈங்கு.’

‘செயப்படு பொருளைச் செய்தது போலத்
தொழிற்படக் கிளத்தலும் வழக்கினுள் உரித்தே.’

‘செயப்படு பொருளைச் செய்தது போலத்
தொழிற்படக் கிளத்தல் தொல்லியல் மரபே.’
 
தொல்.சொல்.246


நே.சொல்.66

நன்.400


மு.வீ.வி.46


ஏவல்ஒருமைமுன் ஈகாரமும் ஏகாரமும் வருமாறு
 

 358 முன்னிலை ஏவல்முன் ஈயும் ஏயும்
அந்நிலை மரபின் மெய்ஊர்ந்து வருமே.
 

 

இது முன்னிலை ஏவல் வினைச்சொல் பற்றி நிகழ்வதோர் கூறுகின்றது.