| ‘வெறியுறு கமழ்கண்ணி வேந்தர்கட்கு ஆயினும்’ | (யா.வி.67-மேற்) |
எனவும் |
| ‘பிறந்தவர்கள் எல்லாம்’ | (சீவக.2622) |
எனவும், வருவன எல்லாவற்றிற்கும் ரகர ஒற்றும் கள் என்ற விகுதியும் ஒருங்கு நிற்பினும், ரகரஒற்றே பால்விளக்கலின் ஏனைக் கள்ஈறு இசை நிறைந்து நின்றதேயாம். மேல் இவ்வாறு வருவனவற்றிற்கு எல்லாம் இவ்வுரை கொள்க. |
விளக்கம் |
ரகர ஈறே பண்டையது. கள் ஈறு ஈண்டுப் புணர்த்தும் கூறல் பிற்பட்ட மரபு. செய்யுள் மேற்கோள் நச்சினார்க்கினியர் உரைத்தவை. (தொல்.சொல்.171) |
சூறாவளி |
‘வெறியுறு கமழ்கண்ணி வேந்தர்கட்கு ஆயினும்’ என்றாற்போல்வனவற்றுள், கள் என்னும் விகுதி இசை நிறைத்து நின்றதேயாம் என்றார். விகுதி இடைச்சொல் என்னும் சொல் ஆகலான், ‘ஒரு பொருட் பன்மொழி சிறப்பினின்வழா’ (நன்.398) என்னும் விதிபற்றிச் சிறப்பின்கண் வந்தமை அறியார் போலும், |
அமைதி |
முனிவர் ‘ஒரு பொருட்பன்மொழி’ (நன்.398) என்ற நூற்பாவில், ‘சிறந்துநிற்றல்- செவிக்குச் சொல்லின்பம் தோன்ற நிற்றல்’ என்ற பொருளைத் தாமே ஏற்றுக்கொண்டவர். இசைநிறை யாவும் செவிக்குச் சொல்லின்பம் தோன்றி நிற்பனவேயாம். தாம் கூறியதையும் மறந்து முனிவர் இவ் வாசிரியரிடம் குற்றம்காண விழைவது விந்தையே. |