பக்கம் எண் :

266 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  ‘முதல்நிலைத் தனிவினைக் குணம்மொழி குறினே
முதல்நிலைத் தொழிற்பெயர் முன்னிலை ஏவல்
ஒருமை முற்றன்றியும் வேறுவினை முற்றொடு
இருவகை எச்சம்அவ் வெச்சம்முற் றுக்களுள்
முதல்நிலை பிரிந்தஅம் முதல்நிலைத் தொழிற்பெயர்
வினைமுதல் ஆதியா வெவ்வேறு ஆதல்
எட்டுருபு ஏற்றே எண்பொருள் ஆதல்
செயப்படு பொருள்குன் றாமையும் குன்றலும்
பொதுவும் இடங்குன் றாமையும் ஆதல்
பலபொருட்கு ஒன்றும்ஓர் பொருட்கே பலவும்
ஆதலும் பகாப்பதம் ஆதலும் அன்றி
இயல்பினும் திரிபினும் பகுதிஎன் றாதல்
ஆதியாப் பலவே ஆகும் என்ப.’

இ.கொ.60

 
    ‘பெயர்வினை இடைஉரி நான்குஅடி யானும்
பிறக்கும் வினையெனப் பேசுவர் புலவர்
பண்படி முதலாப் பலவும் பகர்வர்
அவைஇவை யுள்ளே அடங்கும் என்ப.’

இ.கொ.68


வினைச்சொல் முதல்நிலை அடியாகத் தோன்றுதல்
 

 228. முன்னர் இசைத்த முதல்நிலை அவற்றான்
இன்ன வினைச்சொல் இயலுதல் உடைத்தே.
 

இது முற்கூறிய வினைச்சொல் அங்ஙனம் தோன்றுங் கால் இம்முதல்நிலை
அடியாகத் தோன்றும் என்கின்றது.

இ-ள்: மேல் எழுத்துஓத்துள் கூறிய முதல்நிலைகளான் இத் தன்மையை உடைய
வினைச்சொல் பிறத்தலை உடைத்தாம் என்றவாறு.

முதல்நிலைகளாவன: நட-வா- முதலாயினவும், நடப்பி-வருவி- முதலாயினவும்,
பொருள்- இடம்- காலம் முதலாயினவும், பிறவும் ஆம். இத்தன்மை என்றது வேற்றுமை
கொள்ளாமை முதலிய தன்மை.