‘ஆன்போம் புழை’ என- வாவும்புரவி- போகும்புழை- என்பன உயிர்மெய்கெட்டு நின்றன. மகர ஒற்று நிற்றலான் இவை வினைத்தொகை ஆகா என்க. |
| ‘தெண்கடல்திரை மிசைப்பாயுந்து’ ‘நீர்க்கோழி கூப்பெயர்க்குந்து’ | புறம்.24 புறம்.395 |
எனப் பாயும்-பெயர்க்கும்- என்பன உம் ஈறு உந்தாய்த்திரிந்தன, |
| ‘சாரல் நாடஎன் தோழியும் கலுழ்மே’ ‘அம்பல் ஊரும் அவனொடு மொழிமே’ | குறுந்.51 |
என முறையே கலுழுமே-மொழியுமே- என்பன ஈற்றுயிர் கெட்டும் ஈற்று உயிர்மெய்கெட்டும் நின்றன, பிறவும் அன்ன,இனிப் ‘பிற’ என்றதனான், செய்யும் என்னும் உம் ஈற்று முன்னிலைப் பன்மை முற்றும் இவ்வாறு கெடுதலும் கொள்க. |
| ‘மாமறை மாக்கள் வருகுலம் கேண்மே’ ‘முதுமறை அந்தணிர் முன்னியது உரைமோ’ | மணிமே. 13-93 13-56 |
என முறையே கேளுமோ உரையுமோ என்பன ஈற்று உயிர் கெட்டும் ஈற்று உயிர்மெய் கெட்டும் நின்றன. மகர ஈறு, |
| ‘மவ்வீறு ஒற்று அழிந்து உயிர்ஈறு ஒப்பவும்’ | 129 |
என்பதனால் கெட்டது. இவை மணிமேகலையுள் கண்டன.18 |
விளக்கம் |
எய்தாதது- ஈற்று உயிர்மெய் கெடுதல், உம் உந்தாகத் திரிதல், முற்றின்கண் உயிரும் உயிர்மெய்யும் நீங்குதல் என்பன. |