பக்கம் எண் :

340 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்



 

‘ஆறன்மேல் தோன்றும் பெயரெச்சம்.’
‘செய்த செய்கின்ற செய்யும்என் பாட்டின்
காலமும் செயலும் தோன்றிப் பாலொடு
செய்வதுஆதி அறுபொருட் பெயரும்
எஞ்ச நிற்பது பெயரெச் சம்மே.’

‘எச்சமே தொழில்பொழுது என்றுஇவை தோன்றி
இடம்பால் தோன்றாது எஞ்சிய வினையன இவற்றுள்,
பெயர்சேர்ந்து இயலும் பெயரெச் சம்மே.’

‘காலம் பொருள் நிலம் கருவி வினைமுதல்
வினையோடு அறுவகைப் பொருட்கும் உரிய.’
 
நே.சொல்.45



மு.வீ.வி. 34
நன்.340




தொ.வி. 117


மு.வீ.வி.35
 

செய்யுமென் எச்சத்திற்குச் சிறப்புவிதி
 

244 செய்யும்என் எச்சஈற்று உயிர்மெய் சேறலும்
செய்யுளுள்உம்உந்து ஆதலும் முற்றேல்
உயிரும் உயிர்மெய்யும் ஏகலும் ஆம்பிற.
 


 

இது செய்யும் என்னும் வாய்பாட்டான்வரும் உம்ஈற்றுப் பெயரெச்சத்திற்கும்
முற்றிற்கும் எய்தாதது எய்துவிக்கின்றது.

இ-ள்: செய்யும் என் பெயர்எச்சத்து இறுதி உயிர்மெய் கெடுதலும், செய்யுளிடத்து
உம்ஈறு உந்து எனத்திரிதலும் முற்றாமாயின் ஈற்று உயிர் கெடுதலும், ஈற்று உயிர்மெய்
கெடுதலும் ஆகிய இவ்விதிகள் பெறுதலும் பிறவும் ஆம் என்றவாறு.

உம்மையால் பெறுதல் ஒருதலை அன்ற எனக் கொள்க.
                    ‘வாம் புரவி வழுதியொடு எம்மிடை’ யா.வி.உரை.மேற்.