பக்கம் எண் :

348 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  ‘அவள் ஆடுவழிஆடுவழி அகலேன் மன்னே’
 
அகம்.49
என நிகழ்காலமும், உரைக்கும் வழி என எதிர்காலமும் பற்றி வரும் வழிஈற்றுச்
சொல்லும்,
  ‘களையுநர் கை கொல்லும் காழ்த்த இடத்து’ குறள்.879
என இறந்தகாலமும், உரைக்குமிடத்து என நிகழ்காலமும் எதிர்காலமும் பற்றி
வரும்இடத்துஈற்றுச் சொல்லும்- ஆகிய இவ்வறுவகையீற்றுச் சொல்லும் எனக்கொள்க.

இன்னும் அதனானே,

  ‘விருந்து இன்றி உண்ட பகலும்’
 

திரிகடு.44

எனவரும் இன்றியும்,
 

  ‘நாளன்றுபோகி’
புறம்.124
எனவரும் அன்றியும்,
  ‘நாணும் நட்பும் இல்லோர்த் தேரின்

யான்அலது இல்லைஇவ் வுலகத் தானே’
 


அகம்.268

எனவரும் அல்லதும்,
  ‘நுணங்கிய கேள்வியர் அல்லால்’ குறள்.417
  எனவரும் அல்லாலும்,  
  ‘அவாஉண்டேல் உண்டாம் சிறிது’
 
குறள்.1075
எனவரும் ஏலும்,
  ‘அவன் எள்ளு மேனும் வரும்’
 
எனவரும் ஏனும்- வினையெச்சக் குறிப்புக்களாம் எனக் கொள்க.
 
  ‘ஒன்றானும் தீச்சொல்’
குறள்.128
என்புழி, ஆயினும் என்பது ஆனும் எனக் குறைந்து நின்றது. உண்டான்- உண்டவன்-
என்னும் வினைப்பெயர்கள் உண்டாற்கு- உண்டவற்கு- என்ற நான்கன் உருபு ஏற்றுழிச்