உணர்த்தும் என்ப. அவற்றுள் மெய்ம்மையாகிய காரணம் ஆசிரியர்க்குப் புலனாவது அல்லது நம்மனோர்க்குப் புலன் ஆகாமையின், மொழிப் பொருட் காரணம் இல்லை என்னாது ‘விழிப்பத் தோன்றா’ என்றார். அக்காரணம் பொதுவகையான் ஒன்று ஆயினும் சொல்தொறும் உண்மையின் சிறப்பு வகையான் பலவாம். ஆகலின் ‘விழிப்பத் தோன்றா’ எனப் பன்மையால் கூறினார். உரிச்சொல் பற்றி ஓதினாரேனும் ‘பொருட்குப் பொருள் தெரியின் அது வரம்பு இன்றே’ என்பது முதல் இச்சூத்திரம் காறும் கூறிய விதிகள் எல்லாம் ஏனைச் சொற்களுக்கும் ஒக்கும் என்பது கருத்தாகக் கொள்க, மேல் பொது இலக்கணம் கூறும் பொதுவியலைச் சாரவைத்தமையான் என்க. 15 நான்காவது உரிச்சொல் இயல் முற்றிற்று. |