102                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     பெருந்திணை - முதலில் பொருந்தாக் காமமாக இருந்து பின்
 பொருந்துவதாம்.

     ஐந்திணை - தொடக்கம் முதலே இருவர்மாட்டும்
 அன்புடைக்காமமாய் அமைவது ஆதலின் ஐந்திணைக்காமமே
 சிறப்புடைத்தாம்.

ஒத்த நூற்பாக்கள்

     "கைக்கிளை உடையது ஒருதலைக்காமம்".               ந. அ. 3
     "ஐந்திணை உடையது அன்புடைக் காமம்"                    4
     "பெருந்திணை என்பது பொருந்தாக் காமம்"                  5
     "அவற்றுள் கைக்கிளை ஒருதலைக் காமம்"           மு.வீ.அக 3
     "அன்புடைக் காமம்ஐந்திணைவயின் படுமே"                  4
     "பொருந்தாக் காமம் பெருந்திணைப் பொருட்டே"             5

      அகத்திணையைப் பாடுமாறு

 378 அவைதாம்,
     புனைந்துரை உலகியல் எனும்திறம் இரண்டினும்
     தொல்லியல் வழாமல் சொல்லப் படுமே.

     இஃது எழுவகைத்திணையும் இத்துணைப்பகுதியான் இவ்வாறு கூறப்படும்
 என்கின்றது.

     இ-ள் மேல் காமப்பகுதிக்கு உரிமை கூறிய அகத்திணை ஏழும்
 நாடகவழக்கும் உலகியல்வழக்கும் என்னும் இருபகுதியானும் சங்கம்
 மரீஇயினாரை உள்ளிட்ட சான்றோர் பாடலுள் பயின்று தொன்றுதொட்டு
 வரும் இயல்பில் திரியாது கூறப்படும் என்றவாறு.

     ஈண்டு நாடகவழக்கு என்றது, எவ்விடத்தும் எக்காலத்தும் ஒப்ப நிகழும்
 உலகியல் போலாது, உள்ளோன் தலைவனாக இல்லது புணர்த்தல் முதலாகப்
 புனைந்துரை வகையால் கூறும் நாடக இலக்கணம்போல, யாதானும் ஒரோவழி
 ஒருசாரார்மாட்டு உலகியலான் நிகழும் ஒழுக்கத்தினை எல்லார்க்கும்