106                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

ஒத்த நூற்பாக்கள்

     "நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
     பாடல் சான்ற புலனெறி வழக்கம்,"               தொல். பொ. 53      முழுதும்                                           -ந. அ. 2
                                                              6 

ஐந்திணைகள்

 379 குறிஞ்சி பாலை முல்லை மருதம்
     நெய்தல் ஐந்திணைக்கு எய்திய பெயரே.

     இது, மேல் ஐந்திணை என்றவற்றின் பெயரும் முறையும் கூறுகின்றது.

     இ-ள் குறிஞ்சியும் பாலையும் முல்லையும் மருதமும் நெய்தலும் மேல்
 "ஐந்திணை" எனக கூறிப்போந்தவற்றிற்குப் பொருந்திய பெயராம் என்றவாறு.

     முதற்பொருள் முதலிய மூன்றும்கொண்டே இவ்வைந்திணையாம் என
 மேற்கூறுப ஆதலின், இவற்றிற்கு இப்பெயரும் முறையும் முறையானே
 கருப்பொருள்பற்றியும் உரிப் பொருள்பற்றியும் ஆயினபோலும் என்பது.
 அற்றேல், கருப்பொருள் பலஅன்றே? அவற்றுள் குறிஞ்சி முதலாயினவற்றால்
 பெயர்பெற்றது என்னைஎனின்,

     "கருங்கோல் குறிஞ்சி"                        -குறுந். 3 எனவும்,
     "கோடுறு பல்காய் வால்இணர்ப் பாலை          - நற். 107எனவும்,
     "முல்லையந் தண்பொழில்"
     "மருத மரநிழல்"                            அக நா. 37எனவும்,
     "பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்          குறுந். 9 எனவும்,