110                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

    "முதல்நிலம் பொழுது இரு வகைப்படும் எனலே"       மூ.வீ.அக.7
                                                             9

நிலத்தின் வகைகள்

 382 வரையே சுரமே புறவே பழனம்
     திரையே அவையவை சேர்தரும் இடனே
     எனஈ ரைந்தும் இயம்பிய நிலன்அவை
     குறிஞ்சி முதலா அகன்ஐந் திணைக்கும்
     உறும்திற முறையான் இரண்டுஇரண்டு உரிய

     இது, மேற்கூறிய நிலன் என்னும் முதற்பொருள் இத்துணைப் பகுதித்து
 என்பதூஉம், அப்பகுதிகளுள் இப்பகுதி இத்திணைக்கு உரித்து என்பதூஉம்
 கூறுகின்றது.

    இ-ள் வரையும் சுரமும் காடும் பழனமும் கடலும் அவ்வவற்றைச் சார்ந்த
 இடனும் ஆகிய பத்து வகையினை உடைத்தாம் முற்கூறிய நிலன் என்னும்
 முதற்பொருள். அங்ஙனம் கூறப்பட்ட பகுதிகள் குறிஞ்சி முதலாகிய நடுவண்
 ஐந்திணைக்கும் பொருந்தும் பகுதிக்கண்
 முறையானே இரண்டிரண்டு உரியனவாம் என்றவாறு.

 அவற்றுள்,

     நடுவண் ஐந்திணை நடுவணது ஒழியப்
     படுதிரை வையம் பாத்திய பண்பே"             (தொல். பொ. 2)

 என்ப ஆகலின், பாலைத்திணைக்கு நிலம் கூறுதல் மலைவாம் பிற
 எனின், மதுரைக்காஞ்சியுள் பாலை சான்ற சுரஞ்சேர்ந்து ஒருசார்" (314)
 என்பதனானும் பிறவாற்றானும மலைவு ஆகாது அமைவுடைத்து என்க.   10

 விளக்கம்

     குறிஞ்சி - மலையும் மலைசார்ந்த இடமும்;
     பாலை - வறண்ட பகுதியும் அது சார்ந்த இடமும்;