அகத்திணையியல்-நூற்பா-11,12                             113


 

ஒத்த நூற்பாக்கள்

     முழுதும் - ந. அ. 10

     "காலமே பருவம் பொழுதென இரண்டாம்"          தொ. வி. 166
     "காலம் பருவம் பொழுதுஇரு வகைப்படும்"           மு. வீ. அக.                                                              10
                                                             11

பெரும்பொழுதின் வகைகள்

 384 காரே கூதிர் முன்பனி பின்பனி
     சீர்இள வேனில் வேனில் என்றாங்கு
     இருமூன்று திறத்தது பெரும்பொழுது அவைதாம்
     ஆவணி முதலா இரண்டுஇரண்டு ஆக
     ஆடி இறுதிய ஆயுங் காலே

     இது நிறுத்த முறையானே பெரும்பொழுது இப்பகுதித்து என்பதூஉம்.
  அப்பகுதிகள் இக்கால வரையறைய என்பதூஉம் உணர்த்துகின்றது.

     இ-ள் கார்முதலாக வேனில் ஈறாகச் சொல்லப்பட்ட ஆறு பகுதியினை
 உடைத்தாம் பெரும்பொழுது. அங்ஙனம் பகுதிப்பட்ட பெரும்பொழுதின்
 ஆறுவகைகள்தாம் கால உரிமை எய்திய ஞாயிற்றிற்கு உரிய சிங்கஓரை
 முதலாக, இரண்டுஇரண்டு ஓரையாகத் தண்மதிக்கு உரிய கற்கடக ஓரை
 ஈறாக வந்து முடிவனவாம் ஆராயுங்காலத்து என்றவாறு.               12

 விளக்கம்

     காலஉரிமை எய்திய ஞாயிறு - சூரியனைக்கொண்டு காலத்தைக்
 கணக்கிடும் முறையைச் சொல்லுகிறது. சிங்கஓரை ஆவணிமாதம்; சிங்கஓரை
 ஞாயிற்றிற்குரியது. கற்கடகஓரை  ஆடிமாதம்; கற்கடகஓரை சந்திரனுக்கு
 உரியது என்பதாம்.