அகத்திணையியல்-நூற்பா-13                               115


 

 அறுவகைப்பட்ட சிறுபொழுதுகள்தாம், அத்தம் சென்று அடைந்த
 ஞாயிற்றினது அமையம் தொடங்கி ஒரோஒன்று பப்பத்து நாழிகை அளவை
 உடையனவாம் ஆராயுங் காலத்து என்றவாறு.

     உதயம்தொடங்கி அதன்வழி உதயம்காறும் ஒருவாரமாம் அன்றே?
 அதன் அமையத்தைக்  காலஉரிமை எய்திய ஞாயிற்றின்மேல் ஏற்றிப்
 "படுசுடர் அமையம்" என்றும், "வைகுறு விடியல் மருதம்" (தொல். பொ. 8)
 என ஆசிரியர் தொல்காப்பியனார் ஓதிய "வைகுறு விடியல்" என்பதற்குப்
 பொருள் காணாது அதனை ஒருபொழுதாகவும் கொண்டார்,

     "மாலை யாமம் வைகறை எற்படு
     காலை வெங்கதிர் காயும்நண் பகல்எனக்
     கைவகைச் சிறுபொழுது ஐவகைத்து ஆகும்"            ந. அ. 12

 என்பர்மன்;

     இனிச் செவியறிவுறுத்தலைச் செவியறிவுறூஉ என்றாற் போல,
 வைகுறுவை வைகுறுதல் எனக்கொண்டு வைகுறுதலும் விடியலும் என்று
 உம்மைத்தொகையாக நோக்கின் சிறுபொழுது அறுவகைத்து என்பார்
 "காணுங்கால்" என்றும் கூறினார். எனவே, மாலையும் இடையாமமும்
 கழியும் துணையும் அக்கங்குல் வைகுறுதலை "வைகுறு" என்றார் என்பது
 ஆயிற்று. கங்குல் வைகி அறுதி ஆதலைநோக்கி வைகறை எனவும் பாடம்
 ஓதுப. நாள்வெயிற்காலையை விடியல் என்றார்;

      விடியல்வெங் கதிர்காயும் வேய்அமல் அகல்அறை     (கலி. 45)

 என்ப ஆகலின்.

     "விடியல் வைகறை இடூஉம் ஊரன்".                அக. நா. 196

 என்றது, விடியற்கு முன்னர்த்தாகிய வைகறை என உருபு தொக்கு
 முன்மொழி நிலையல்  ஆயிற்று.                                  13