124                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     "விடியற்கு உரிய விலங்குபுள் ளினம்முதல்
     மகிழ்தல் தாமரை மலர்தலும் ஆகும்"             மு. வீ. அக. 31

     "கானல்நீர் ஓடல் களிப்புறச் சக்கர
     வாகம் எருமை மாடுநீர்க் கிடத்தல்
     உச்சிக்கு உரியவாம் உணருங் காலே".                     " 32

            14

கருப்பொருள்களின் வகை

 387 ஆரணங்கு உயர்ந்தோர் அல்லோர் புள்விலங்கு
      ஊர்நீர் பூமரம் உணாப்பறை யாழ்பண்
      தொழில்எனக் கருஈ ரெழுவகைத்து ஆகும்.

     இது, நிறுத்தமுறையானே கருப்பொருள் இத்துணைப் பகுதித்து
 என்கின்றது.

     இ-ள் தெய்வம் முதலாகத் தொழில் ஈறாகச் சொல்லப்பட்ட பதினான்கு
 வகையினை உடைத்தாம் மேற்கூறிப் போந்த கருப்பொருள் என்றவாறு.   15

 விளக்கம்

     நிறுத்தமுறை - 8 ஆம்நூற்பாவில் நிறுத்தியமுறை;
     ஆரணங்கு - நிலத்தெய்வம்;
     உயர்ந்தோர் - தலைமக்கள்;
     அல்லோர் - பொதுமக்கள்;

ஒத்த நூற்பாக்கள்

     "தெய்வம் உணாவே மாமரம் புள்பறை
     செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
     அவ்வகை பிறவும் கருஎன மொழிப".             தொல். பொ. 18

     முழுதும்                                                        ந. அ. 19
     "தெய்வம் மானிடம் செய்தி உணவோடு
     எய்திய இசைவிலங்கு இன்னன பிறவும்
     பொய்தீர் கருஎனப் புகன்றனர் கொளலே".          த. நெ. வி. 6