பொதுவகையால் கூறிய கருப்பொருள்பகுதி பதினான்கினையும்
 சிறப்புவகையால் திணைக்குஉரிமை எய்துவிப்பான் புகுந்தவற்றுள்,
 இது, முறையானே குறிஞ்சித் திணைக்கு உரிய கருப்பொருள் இவை 
 என்கின்றது.
     இ-ள் வெற்றியை உடைய முருகவேள் ஆகியதெய்வம் முதலாகச்
 சுனையாடல் ஆகிய தொழில் ஈறாகச் சொல்லப்பட்ட பதினான்கு பகுதியும்
 குறிஞ்சித்திணைக்குச் சிறந்த கருப்பொருளாம் என்றவாறு.              16