அகத்திணையியல்-நூற்பா-15                               125


 

     "தெய்வம் செல்வர் சேர்குடி புள்விலங்கு
     ஊர்நீர் பூமரம் உணாப்பறை யாழ்பண்
     தொழிலெனக் கருஈ ரெழுவகைத் தாகும்".

               தொ.வி.175 மு. வீ. அக. 33

15

குறிஞ்சிக் கருப்பொருள்கள்

 388 விறற்சேய் பொருப்பன் வெற்பன் சிலம்பன்
     குறத்தி கொடிச்சி குறவர் கானவர்
     குறத்தியர் கிளிமயில் மறப்புலி குடாவடி
     கறையடி சீயம் சிறுகுடி அருவி
     நறுஞ்சுனை வேங்கை குறிஞ்சி காந்தள்
     ஆரம் தேக்குஅகில் அசோகம் நாகம்
     வேரல் ஐவனம் தோரை ஏனல்
     கறங்குஇசைத் தொண்டகம் குறிஞ்சியாழ் குறிஞ்சி
     வெறிகோள் ஐவனம் வித்தல் செறிகுரல்
     பைந்தினை காத்தல் செந்தேன் அழித்தல்
     செழுங்கிழங்கு அகழ்தல் முழங்கிவீழ் அருவியொடு
     கொழுஞ்சுனை ஆடல் குறிஞ்சிக்கருப் பொருளே.

     பொதுவகையால் கூறிய கருப்பொருள்பகுதி பதினான்கினையும்
 சிறப்புவகையால் திணைக்குஉரிமை எய்துவிப்பான் புகுந்தவற்றுள்,
 இது, முறையானே குறிஞ்சித் திணைக்கு உரிய கருப்பொருள் இவை
 என்கின்றது.

     இ-ள் வெற்றியை உடைய முருகவேள் ஆகியதெய்வம் முதலாகச்
 சுனையாடல் ஆகிய தொழில் ஈறாகச் சொல்லப்பட்ட பதினான்கு பகுதியும்
 குறிஞ்சித்திணைக்குச் சிறந்த கருப்பொருளாம் என்றவாறு.              16