126                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

 விளக்கம்

     தெய்வம்-முருகன்
     தலைமக்களுள் ஆடவர் - பொருப்பன், வெற்பன், சிலம்பன்
     தலைமக்களுள் மகளிர் - குறத்தி, கொடிச்சி
     பொதுமக்களுள் ஆடவர் - குறவர், கானவர்
     பொதுமக்களுள் மகளிர் - குறத்தியர்
     பறவைகள் - கிளி, மயில்
     விலங்குகள் - புலி, கரடி, யானை, சிங்கம்
     ஊர்ப்பெயர் - சிறுகுடி
     நீர்நிலை - அருவி, சுனை
     பூக்கள் - வேங்கை, குறிஞ்சி, காந்தள்
     மரங்கள் - ஆரம், தேக்கு அகில், அசோகம், நாகம்
     உணவுகள் - மூங்கில்நெல், மலைநெல், துவரை, தினை
     பறை - தொண்டகம்
     யாழ் - குறிஞ்சியாழ்
     பண் - குறிஞ்சிப்பண்

     தொழில் - வெறியாடல், மலைநெல் விதைத்தல், தினைப்புனம் காத்தல்,
      தேன்கூடுகளை அழித்தல், வள்ளி முதலிய கிழங்குகளை அகழ்ந்து
      எடுத்தல், அருவிகளிலும் சுனைகளிலும் நீராடுதல்.

ஒத்த நூற்பாக்கள்

     முழுதும்                                ந. அ. 20, தொ. வி. 176

    "மலைஇருள் முன்பனி கூதிர்வெற் பன்கண மூங்கில்மஞ்ஞை
    இலைமலி வேங்கைசெங் காந்தள் இலவம் இகல்முருகன்
    சிலைமலி குன்றவர் தேனே புணர்தல் தினைசுனையும்
    கொலைமலி யானை குறிஞ்சிஎன்று இன்ன குறிஞ்சியிலே"    வீ. 92

    "வேற்கர முருகன் வெற்பன் சிலம்பன்
    குறத்தி கொடிச்சி குறவர் கானவர்
    குறத்தியர் கிளிமயில் கொல்சினக் களிறு