அரிமாச் சிறுகுடி அருவி அகன்சுனை
ஆரம் தேக்குஅகில் அசோகம் ஐவனம்
உணாத் தொண்டகம்தினை ஓம்பல் குறிஞ்சியாழ்
குறிஞ்சிக் கருப்பொரு ளாம்குறித் திடினே? மு. வீ. அக. 34
389 கன்னி விடலை காளை மீளி
இன்னகை எயிற்றி எயினர் எயிற்றியர்
மறவர் மறத்தியர் புறவுபருந்து எருவை
கழுகு செந்நாய் கல்கெழு குறும்பு
குழிவறுங் கூவல் குராஅ மராஅ
உழிஞை பாலை ஓமை இருப்பை
வழங்குகதிக் கொண்டன செழும்பதிக் கவர்ந்தன
பகைத்துடி பாலையாழ் பஞ்சுரம் வெஞ்சமம்
பகல்சூறை யாடல் பாலைக்கருப் பொருளே.
இது முறையானே பாலைத்திணைக்கு உரிய கருப்பொருள் இவை என்கின்றது.
இ-ள் சயமடந்தையாகிய தெய்வம் முதலாகச் சூறையாடல் ஆகிய தொழில் ஈறாகச் சொல்லப்பட்ட பதினான்கு பகுதியும் பாலைத்திணைக்குச் சிறந்த கருப்பொருளாம் என்றவாறு. 17
முறை-ஏழாம் நூற்பாவில் நிறுத்திய முறை
தெய்வம்-துர்க்கை
உயர்மக்கள்-விடலை, காளை, மீளி, எயிற்றி
பொதுமக்கள்-எயினர், மறவர், எயிற்றியர், மறத்தியர்
பறவைகள்-புறவு, பருந்து, எருவை, கழுகு
விலங்கு - செந்நாய்
ஊர்ப்பெயர்-குறும்பு
|
|
|
|