142                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

    கல்போல் பிரியலம் என்ற சொல்தான்
    மறந்தனர் கொல்லோ தோழி சிறந்த
    வேய்மருள் பணைத்தோள் நெகிழச் சேய்நாட்டுப்
    பொலங்கல வெறுக்கை தருமார் நிலம்பக
    அழல்போல் வெங்கதிர் பைதுஅறத் தெறுதலின்
    நிழல்தேய்ந்து உலறிய மரத்த அறைகாய்பு
    அறுநீர்ப் பைஞ்சுனை ஆம்அறப் புலர்தலின்
    உகுநெல் பொரியும் வெம்மைய யாவரும்
    வழங்குநர் இன்மையின் வௌவுநர் மடியச்
    சுரம்புல் லென்ற ஆற்ற அலங்குசினை
    நார்இல் முருங்கை நவிரல் வான்பூச்
    சூரல்அம் கடுவளி எடுப்ப ஆர்உற்று
    உடைதிரைப் பிதிர்வில் பொங்கிமுன்
    கடல்போல் தோன்றல காடுஇறந் தோரே                அகநா. 1

    இது பிரிவிடை ஆற்றாளாய தலைமகள் தோழிக்குக் கூறியது;
 இக்களிற்றியானை நிரையுள்ளும்,                                   1

    முல்லை வைநுதி தோன்ற இல்லமொடு
    பைங்கால் கொன்றை மென்பிணி அவிழ
    இரும்புதிரித் தன்ன மாயிரு மருப்பின்
    பரல்அவல் அடைய இரலை தெறிப்ப
    மலர்ந்த ஞாலம் புலம்புபுறம் கொடுப்பக்
    கருவி வானம் கதழ்உறை சிதறிக்
    கார்செய் தன்றே கவின்பெறு கானம்
    குரங்குஉளைப் பொலிந்த கொய்சுவல் புரவி
    நரம்புஆர்ப்பு அன்ன வாங்குவள் பரியப்
    பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
    தாதுஉண் பறவை பேதுறல் அஞ்சி
    மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரின்
    உதுக்காண் தோன்றும் குறும்பொறை நாடன்
    கறங்குஇசை விழவின் உறந்தைக் குணாஅது