அகத்திணையியல்-நூற்பா-21                               143


 

    நெடும்பெருங் குன்றத்து அமன்ற காந்தள்
    போதுஅவிழ் அலரின் நாறும்
    ஆய்தொடி அரிவைநின் மாண்நலம் படர்ந்தே.          அகநா. 4

    இது "குறித்த காலம் வந்தது; அவரும் வந்தார்" என்று தோழி
 தலைவியை ஆற்றுவித்தது; இக்களிற்றியானை நிரையுள்ளும்,             4

    சேற்றுநிலை முனைஇய செங்கண் காரான்
    ஊர்மடி கங்குலின் நோன்தளை (ஒண்தளை) பரிந்து
    கூர்முள் வேலி கோட்டினின் நீக்கி
    நீர்முதிர் பழனத்து மீன்உடன் இரிய
    அந்தூம்பு வள்ளை மயக்கித் தாமரை
    வண்டுஊது பனிமலர் ஆரும் ஊர
    யாரை யோநிற் புலக்கேம் வாருற்று
    உறைஇறந்து ஒளிறும் தாழ்இருங் கூந்தல்
    பிறழும் ஒருத்தியை எம்மனைத் தந்து
    வதுவை அயர்ந்தனை என்ப அஃதுயாம்
    கூறேம் வாழியர் எந்தை செறுநர்
    களிறுஉடை அருஞ்சமம் ததைய நூறும்
    ஒளிறுவாள் தானைக் கொற்கைச் செழியன்
    பிண்ட நெல்லின் அள்ளூர் அன்னஎம்
    ஒண்தொடி நெகிழினும் நெகிழ்க
    சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரே.                 அகநா. 46

    இது தலைவற்குத் தோழி வாயில்மறுத்தது; இக்களிற்றியானை
 நிரையுள்ளும்,

    கானல் மாலைக் கழிப்பூக் கூம்ப
    நீல்நிறப் பெருங்கடல் பாடுஎழுந்து ஒலிப்ப
    மீன்ஆர் குருகின் மென்பறைத் தொழுதி
    குவைஇரும் புன்னைக் குடம்பை சேர
    அசைவண்டு ஆர்க்கும் அல்குறு காலைத்