தாழை தளரத் தூங்கி மாலை
அழிதக வந்த கொண்டலொடு கழிபடர்
காமர் நெஞ்சம் கைஅறுபு இனையத்
துயரம் செய்துநம் அருளார் ஆயினும்
அறாஅ லியரோ அவருடைக் கேண்மை
அளியின் மையின் அவண்உறைவு முனைஇ
வாரற்க தில்ல தோழி கழனி
வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்பும்
தண்ணுமை வெரீஇய தடந்தாள் நாரை
செறிமடை வயிரின் பிளிற்றிப் பெண்ணை
அகமடல் சேக்கும் துறைவன்
இன்துயில் மார்பில் சென்றஎன் நெஞ்சே அகநா. 40