அகத்திணையியல்-நூற்பா-21                               145


 

    நாளும் நாளும் ஆள்வினை அழுங்க
    இல்லிருந்து மகிழ்வோர்க்கு இல்லையால் புகழ்என
    ஒண்பொருட்கு அகல்வர் நம் காதலர்
    கண்பனி துடைஇனித் தோழி நீயே.              (சிற்றெட்டகம்)

   இது வற்புறுத்து ஆற்றியது; உரிப்பொருள் ஒன்றுமே வந்த பாலை,

    திருநகர் விளங்கும் மாசில் கற்பின்
    அரிமதர் மழைக்கண் மாஅ யோளொடு
    நின்னுடைக் கேண்மை எவனோ முல்லை
    இரும்பல் கூந்தல் நாற்றமும்
    முருந்துஏர் வெண்பல் ஒளியும்நீ பெறவே.

   இது பொருளிற் பிரிந்தோன் சுரம் நினைந்து உரைத்தது; முதற்பொருள்
 இன்றி வந்த முல்லை.

    கரந்தை விரைஇய தண்ணறுங் கண்ணி
    இளையர் ஏவ இயங்குபரி கடைஇப்
    பகைமுனை வலிக்கும் தேரொடு
    வினைமுடித் தனர்நம் காதலோரே.

  இது வந்தார் என்று ஆற்றுவித்தது; முதலும் கருவும் இன்றி வந்த முல்லை.

    பூங்கொடி மருங்கின் எங்கை கேண்மை
    முன்னும் பின்னு மாகி
    இன்னும் பாணன் எம்வயி னோனே.

    இது வாயில் மறுத்தது; உரிப்பொருள் ஒன்றுமே வந்த மருதம்.

    அங்கண் மதியம் அரவின்வாய்ப் பட்டெனப்
    பூசல் வாயாப் புலம்புமனைக் கலங்கி

    19