156                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     நற்றாய் செவிலி என்றிவர் நன்னுதற்கு
     உற்றதை அறியாது நற்றிறம் படர்தலும்
     கட்டுரை கூட்டலும் கேட்டவள் கூற்றும்
     ஒட்டிவெறி அயர்தலும் ஒண்ணுதல் அழுங்கலும்
     இவ்வியல் அன்னைக்கு உணர்த்துக என்றலும்
     அவ்வியல் ஒட்டாள் மொழிதலும் ஆயிடைப்
     பூத்தரு புணர்ச்சியும் புனல்தரு புணர்ச்சியும்
     காப்பரும் புனத்துக் களிறுதரு புணர்ச்சியும்
     தாய்தரு புணர்ச்சியும்
     கூறிய தாயது குறப்புவழி மொழிதலும்
     வரைந்துநனி புகுதலும் வரைவுஅவர் மறுத்தலும்
     கரைந்ததற்கு இரங்கலும் கவற்சி தீர்தலும்
     எதிர்கொளல் மொழிதலும் ஏற்றுமகள் மொழிதலும்
     நிரவிய இயற்கையோடு இன்னவை பொருளே.

     பாலை நடையியல்

     நூல்இயல் முறைமை நுண்ணிதின் உணர்ந்தோர்
     பாலை நடையது பகருங் காலை
     உடன்போக்கு உணர்த்தலும் அப்போக்கு உரைத்தலும்
     மடவோள் தன்திறம் மாண்புற நோக்கலும்
     கற்பியல் காட்டலும் கைஉய்த்து மொழிதலும்
     வெற்பிடைப் போதலும் மெல்லியல் தளர்தலும்
     தளர்ந்தோள் ஓம்பலும் தம்முள்நேர் என்றலும்
     எதிர்ந்தோர் மொழிதலும் எதிர்கொளத் தவிர்தலும்
     கண்டோர் ஏத்திய கற்புடை ஒழுக்கமும்
     தண்தளிர் மாடம் தனக்குஉரை மாற்றமும்
     தாங்கரும் பூசல் தன்னையர் எழுச்சியும்
     ஆங்கவள் வலித்தலும் அமைந்தோர் திருத்தலும்
     மதியுடன் படுத்தலும் பண்பெய்த மொழிதலும்
     ஈன்றோள் இரங்கலும் எதிர்ந்தோர் கூறலும்
     அம்பலும் அலரும் ஆதலும் அயலோர்