அகத்திணையியல்-நூற்பா-21                               157


 

     தோன்றக் கூறிய தோம்அறு கற்பும்
     அன்புறு செவிலி பின்செல வலித்தலும்
     சென்றவள் வினவலும் கண்டோர் தெருட்டலும்
     ஒன்றிய உள்ளமொடு உவந்துஅவள் மீண்டலும்
     வறுஞ்சுரம் கடந்தவர் வளநாடு புகுதலும்
     பிறங்குபுகழ்ப் புதல்வரைப் பெறுதலும் பெற்றோள்
     இருங்கிளை மருங்கின் தூது விடுத்தலும்
     ஒருங்க வருந்தலும் உவந்துடன் சென்றலும்
     மாதரைக் கொண்டுதன் வாழ்பதி புகுதலும்
     ஓதிய அனைத்தும் உரியவை புக்கபின்
     பொருள்வயின் பிரிதலும் அப்பிரிவு உணர்த்தலும்
     இருள்புரி கூந்தல் இற்றுஎன மொழிதலும்
     ஆற்றான் ஆதலும் அதுகேட்டு மொழிதலும்
     கூற்றம் கொளீஇய உலகியல் உரைத்தலும்
     பின்னைப் பிரிதலும் பெருஞ்சுரத்து அழுங்கலும்
     நனிபகர் பள்ளியின் நயந்துசெலவு அழுங்கலும்
     பரத்தையின் பிரிவொழித்து எல்லாப் பிரிவும்
     உரைக்குங் காலை உணர்ந்தனன் நோக்கே.

     முல்லை நடையியல்

     இறைச்சிப் பெருமையோடு இறைவழிப் பட்டுக்
     கற்புக்கடம் பூண்டு கடப்பாடு ஆற்றும்
     முல்லைத் திணைநடை சொல்லுங் காலை
     இறைவன் பிரிய இல்லிருந்து ஆற்றி
     நினைவுநனி காத்தல் நீர்மையின் மொழிதல்
     மாழைஅம் கண்ணி வருந்தினள் பெரிதுஎனத்
     தோழி கவறல் கவன்ற தோழிக்கு
     ஆற்றுவன் என்றல் அவள்பயம் உரைத்தல்
     வேற்றுமை கூறல் வெய்துஉயிர்த்து இரங்கல்
     மின்மலி கார்கண்டு மெலிந்தவள் மொழிதல்
     தொன்மலி தோழி காலம் மறுத்தல்